Just In
- 3 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி... காரணம் என்ன தெரியுமா?
போலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை விட மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும்.
இதே போன்று பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது.
ஆனால் நாளாக நாளாக மிக கடுமையான எதிர்ப்பு எழ தொடங்கி விட்டது. வாகன ஓட்டிகளிடம் போலீசார் காட்டிய கெடுபிடிகளும், கடுமையான அபராத தொகைகளும் இதற்கு காரணமாக அமைந்து விட்டன. ஒரு சிலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டன.
புதிய அபராத தொகைகள் வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என்பதால், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அதே சமயம் பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதுதவிர பாஜக ஆளும் கர்நாடகாவும் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. இந்த சூழலில் பாஜக ஆட்சி செய்து வரும் மற்றொரு முக்கியமான மாநிலமான உத்தர பிரதேச அரசும் புதிதாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக பரிசீலனையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கட்டாரியா கூறுகையில், ''இது தொடர்பாக நாங்கள் விரைவில் முடிவு எடுப்போம்'' என்றார். உத்தர பிரதேசத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகன சோதனையின்போது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கௌரவ் சர்மா (35) என்ற சாப்ட்வேர் இன்ஜினியர், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக, கான்ஸ்டபிள் ஒருவர் அவரது காரை லத்தியால் தட்டி தடுத்து நிறுத்தியுள்ளார். இதன்பின் கௌரவ் சர்மா, அவரது குடும்பத்தினரிடம் அந்த கான்ஸ்டபிள் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கௌரவ் சர்மாவின் குடும்பத்தினர் இந்த புகாரை கூறியுள்ளனர். இதன்பின் கௌரவ் சர்மா காரை விட்டு கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கௌரவ் சர்மா திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கௌரவ் சர்மாவின் சகோதரர் வைபவ் கூறுகையில், ''கௌரவ் சர்மா கீழே விழுந்தவுடன், அந்த போலீஸ்காரர் அங்கிருந்து சென்று விட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் வேறு யாருக்கும் நடக்க கூடாது என நாங்கள் நினைக்கிறோம்'' என்றார். இது தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் உத்தர பிரதேச மாநில எதிர்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக அபராத தொகைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கும், சாப்ட்வேர் இன்ஜினியர் பலியானதற்கும் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டங்களை பதிவு செய்துள்ளார்.
வாகன சோதனையின்போது மாரடைப்பு ஏற்பட்டதால்தான் கௌரவ் சர்மா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ''பாஜக அரசின் போக்குவரத்து பயங்கரவாதம் (Traffic Terrorism) காரணமாக, நொய்டாவில் வாகன சோதனையின்போது, மாரடைப்பு ஏற்பட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது'' என அகிலேஷ் யாதவ் ட்விட் செய்துள்ளார்.
அத்துடன் இந்த அடக்குமுறை விதிகளை பாஜக ஆளும் குஜராத்தே நிராகரித்து விட்டது. அதேபோன்று உத்தர பிரதேச அரசும் மாநிலத்தில் துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும் எனவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்திலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் குறைக்கப்பட்டு விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதன் மூலமாக மட்டுமே நாட்டில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற மத்திய அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால் அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உள்ளதாலும், இதுபோன்ற விரும்பத்தகாத சில நிகழ்வுகளாலும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தர பிரதேசம் தவிர தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் அபராத தொகைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அபராத தொகைகள் குறைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்