Just In
- 33 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் வாகனங்களால் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் சில சமயங்களில் கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. தற்போது கூட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபிய அரசு நடத்தி வரும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகள் மீது ஆள் இல்லாத விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை இதுபோன்று சில சமயங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விடுவதால், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது மத்திய அரசும் பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் அதிகப்படியான தொகையால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்.
எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன் மூலமாக பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னைக்கும் முடிவு கட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம். எனவே பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்தது.
இத்தனைக்கும் 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படும் சென்னையை தன்னகத்தே கொண்டிருப்பது தமிழகம்தான். சென்னை நகரை சுற்றி, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் 'ஆசியாவின் டெட்ராய்டு' என்ற அடைமொழியை சென்னை பெற்றுள்ளது.
இருந்தபோதும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான பெரிய அளவிலான அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த குறைகள் அனைத்தையும் தமிழக அரசு தற்போது போக்கியுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை இன்று (செப்டம்பர் 16) வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் சில முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்படி வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும்.
இதுதவிர தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அளிக்கப்படவுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில், இந்த அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். குறிப்பாக பேருந்து போன்ற பொது போக்குவரத்து முறையை மின்சார மயமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சோதனை அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் எலெக்ட்ரிக் பஸ் சேவையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டபடி தங்கள் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதில் பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆந்திராவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முயற்சிகளை எடுத்தார். தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியும் அதனை பின்பற்றி வருகிறார்.
அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசும் தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இது பாராட்ட வேண்டிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க முயலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்