Just In
- 16 min ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 39 min ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 1 hr ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 4 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
Don't Miss!
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- News முதல் கட்ட லோக்சபா தேர்தல்: நாளை களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள் யார்?
- Movies ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வேலைவாய்ப்பு அதிகமாகும்... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கொண்டாட்டம்... என்னவென்று தெரியுமா?
வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை பஸ், லாரி மற்றும் டாக்ஸி போன்ற கமர்ஷியல் வாகனங்களை இயக்க வேண்டுமென்றால், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கல்வி தகுதியாக இருந்து வந்தது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1989ன் ஒரு பகுதியாக இப்படி ஒரு விதிமுறை வகுக்கப்பட்டது.
வெளிமாநிலங்களுக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் டிரைவர்கள், ஊர்களின் பெயர்களை படிக்க வேண்டும், வழியில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை படிக்க வேண்டும், போக்குவரத்து எச்சரிக்கை பலகைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே இப்படி ஒரு விதிமுறை உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என பஸ் மற்றும் லாரி உரிமையாளர்களின் சங்கங்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் பஸ் மற்றும் லாரி டிரைவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. இது தொடர்பாக அவர்களால் மனுவும் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ டேட்டாவின்படி, தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு வண்டிகள் மற்றும் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த வாகனங்களை இயக்குவதற்கு வெறும் 4 லட்சம் ரெகுலர் டிரைவர்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். எனவே இந்த இடைவெளியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கையாக இருந்தது.
தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம், டிரைவிங் லைசென்ஸ் பெற தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதியை தமிழக அரசு தற்போது அதிரடியாக நீக்கியுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த மாதம் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தை சேர்ந்த டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் டிரைவர்களின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படிக்காத நபர்கள் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை போக்குவரத்து துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 8ம் வகுப்பு வரை படித்த டிரைவர்களால் 11 சதவீதத்திற்கும் குறைவான விபத்துக்கள் மட்டுமே (7,770) நடைபெற்றுள்ளன. அதே சமயம் படித்தவர்களால் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை 60,000 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் இதுபோன்ற முன்னோடி திட்டங்களை அறிவிப்பது முதல் முறையல்ல இதற்கு முன்னதாகவும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலான ஓர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை பஸ், லாரி மற்றும் டாக்ஸி போன்ற கமர்ஷியல் வாகனங்களை இயக்க வேண்டுமென்றால், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கல்வி தகுதியாக இருந்து வந்தது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1989ன் ஒரு பகுதியாக இப்படி ஒரு விதிமுறை வகுக்கப்பட்டது.
வெளிமாநிலங்களுக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் டிரைவர்கள், ஊர்களின் பெயர்களை படிக்க வேண்டும், வழியில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை படிக்க வேண்டும், போக்குவரத்து எச்சரிக்கை பலகைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே இப்படி ஒரு விதிமுறை உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என பஸ் மற்றும் லாரி உரிமையாளர்களின் சங்கங்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் பஸ் மற்றும் லாரி டிரைவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. இது தொடர்பாக அவர்களால் மனுவும் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ டேட்டாவின்படி, தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு வண்டிகள் மற்றும் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த வாகனங்களை இயக்குவதற்கு வெறும் 4 லட்சம் ரெகுலர் டிரைவர்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். எனவே இந்த இடைவெளியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கையாக இருந்தது.
தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம், டிரைவிங் லைசென்ஸ் பெற தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதியை தமிழக அரசு தற்போது அதிரடியாக நீக்கியுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த மாதம் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தை சேர்ந்த டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் டிரைவர்களின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படிக்காத நபர்கள் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை போக்குவரத்து துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 8ம் வகுப்பு வரை படித்த டிரைவர்களால் 11 சதவீதத்திற்கும் குறைவான விபத்துக்கள் மட்டுமே (7,770) நடைபெற்றுள்ளன. அதே சமயம் படித்தவர்களால் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை 60,000 என்பது குறிப்பிடத்தக்கது.