Just In
- 38 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 57 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்!
டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எலெக்ட்ரிக் காருக்கான புதிய தொழில்நுட்பம் குறித்த விபரத்தை டாடா மோட்டார்ஸ் நேற்று வெளியிட்டது. தமது எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார், டிரான்ஸ்மிஷன் மற்றும் இயக்கத்திற்கு துணைபுரியும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை ஸிப்ட்ரான் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பில், பர்மனென்ட் மேக்னெட் ஏசி மோட்டார், டிரான்ஸ்மிஷன், பேட்டரி மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. அத்துடன் டாடா ஸிப்ட்ரான் தொகுப்பில் இருக்கும் மின் மோட்டார் மிக மிக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் இடம்பெறும் பேட்டரியானது தூசி மற்றும் தண்ணீர் புகாத அளவுக்கு சிறப்பான தடுப்பு அமைப்பை பெற்றிருக்கும். அதாவது, IP67 என்ற உயர்வகை பாதுகாப்பு கவச அமைப்பை இந்த பேட்டரி பெற்றிருக்கும்.
அதேபோன்று, இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பில் ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. பிரேக் பிடிக்கும்போது ஏற்படும் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும். இதன்மூலமாக, கூடுதல் பயண தூரத்திற்கான உறுதியை பெற முடியும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது. டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்களில் இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மின்சார கார் சந்தையை இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் புதிய அத்யாயத்தை எழுதும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. அதிக பயண தூரத்தையும், வாடிக்கையாளர்களை சிலிர்க்க வைக்கும் செயல்திறனையும் இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் வழங்கும் என்கிறது டாடா மோட்டார்ஸ்.
இதற்காக வழங்கப்படும் விசேஷ சாஃப்ட்வேர் மூலமாக காரின் இயக்கம் குறித்த தகவல்கள், பழுது எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பெறுவதற்கான விசேஷ செயலியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த ஸிப்ட்ரான் தொகுப்பில் இடம்பெறும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும். பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் சார்ஜ் ஏற்ற முடியும். தவிரவும், சாதாரண வீட்டு பிளக் பாயிண்ட்டுகளிலிருந்து சார்ஜ் ஏற்றும் வசதியையும் அளிக்கும்.
டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பு பயன்படுத்தப்படும் முதல் கார் மாடல் நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டு காலம், அதாவது 2020 ஜனவரி முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இதனை பார்க்கலாம்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!