Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலக அளவில் இந்தியாவை பெருமிதப்படுத்தும் டாடா... லாரி மோதியும் கார் அசராததால் குவியும் பாராட்டு...
லாரி மோதியும் கூட டாடா ஹாரியர் கார் அசராமல் நின்றது. இதனால் டாடா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் (Tata Harrier) கார், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்யூவி ரக காரான டாடா ஹாரியரின் விற்பனை தற்போது அமோகமாக உள்ளது.
நேரடி போட்டியாளர்களான மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களை காட்டிலும், டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா நிறுவனம் மொத்தம் 2,075 ஹாரியர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் இதே மாதத்தில் 1,508 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் கார்களின் எண்ணிக்கையோ வெறும் 1,208 மட்டுமே.
இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் சந்தித்துள்ள வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. டாடா ஹாரியர் காரில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு வசதிகள் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் சிறப்பான கட்டுமான தரத்தை (Build Quality) பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பாதுகாப்பில் ஹாரியர் தலை சிறந்து விளங்குகிறது. இந்த சூழலில் டாடா ஹாரியர் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
டாடா ஹாரியர் கார் ஒன்று சமீபத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. வேகமாக வந்த லாரி ஒன்று டாடா ஹாரியர் காரின் பக்கவாட்டில் மோதி விட்டது. ஆனால் மிக சிறப்பான கட்டுமான தரத்தை கொண்டிருப்பதால், இந்த தாக்கத்தை டாடா ஹாரியர் நன்றாகவே எதிர்கொண்டது.
விபத்தில் சிக்கியது வெள்ளை நிற டாடா ஹாரியர் ஆகும். விபத்து தொடர்பாக வெளியான புகை படங்களை வைத்து பார்க்கையில், இது புத்தம் புதிய காராக இருக்கலாம் என்பது தெரியவருகிறது. இந்த கார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. லாரி மோதியதன் காரணமாக, அந்த காரின் பக்கவாட்டில் சில டெண்ட்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. மற்றபடி பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை. அத்துடன் காருக்கு உள்ளே இருந்த பயணிகளுக்கும் எதுவும் ஆகவில்லை.
அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் ஹாரியர் காரை தயாரித்த டாடா நிறுவனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக புதிய கார்களை தேர்வு செய்யும்போது இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தற்போது பாதுகாப்பு வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் ஒரு படி மேலே உள்ளது. இதற்கு டாடா நெக்ஸான் (Tata Nexon) ஒரு உதாரணம்.
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் கார், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியது. இதன் மூலமாக குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் ''மேட் இன் இந்தியா கார்'' என்ற பெருமையை அது பெற்றது.
அதன்பின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியரும் பாதுகாப்பு அம்சங்களில் அசத்துகிறது. இதில், 6 ஏர் பேக்குகள், ஆஃப் ரோடு ஏபிஎஸ், இபிடி உடனான ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை டாடா நிறுவனம் வழங்குகிறது.
அத்துடன் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் ஹாரியர் எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு என வந்து விட்டால், டாடா ஹாரியரில் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன.
டாடா ஹாரியர் எஸ்யூவி கார், ரூ.12.71 லட்சம் முதல் ரூ.16.37 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. டாடா நிறுவனம் தொடர்ந்து தனது அனைத்து மாடல்களையும் சிறப்பான கட்டுமான தரத்துடன் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மேற்கண்ட விபத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.