Just In
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,200 கோடியை டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்துள்ளது.
தற்போது பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகள் அமலில் உள்ளன. அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால் மாசு உமிழ்வு பெரு நகரங்களின் சுவாசப் பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், அடுத்து பிஎஸ்-5 மாசு உமிழ்வு விதிகளுக்கு பதிலாக நேரடியாக பிஎஸ்- மாசு உமிழ்வு விதிகளை அமல்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அத்துடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.
மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையான தரத்துடன் கார்களை அறிமுகம் செய்ய துவங்கிவிட்டது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் எஞ்சின்களை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் கூறுகையில்," பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, ரூ.1,200 கோடியை முதலீடு செய்யப்பட்டுள்ளது," என்று கூறி இருக்கிறார்.
ஒரே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் செய்த அதிக அளவு முதலீடாக இது தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்திற்கு தக்கவாறு, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களை தயாரிப்பதற்காக பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மூலமாக புதிதாக தயாரிக்கப்படும் கார்களின் நச்சுப் புகை வெளியேற்ற அளவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.
பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக கார் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.
ஆனால், அதற்கு தக்கவாறு விற்பனை இருக்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. மேலும், பிஎஸ்-6 கார்களின் விலையை முதலீட்டுக்கு தக்கவாறு கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவும், டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350