Just In
- 49 min ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 2 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 2 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 2 hrs ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
Don't Miss!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Finance ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. பல மடங்கு ரிட்டர்ன்.. பெண்கள் நோட் பண்ணுங்க.. அசத்தல் திட்டம்
- Technology அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Movies Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு!
வரும் ஜனவரி முதல் டாடா கார் விலை கணிசமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கார் விலையை உயர்த்துவது குறித்து கார் நிறுவனங்கள் பரீசிலிப்பதும், உயர்த்துவதும் வழக்கமான விஷயம்தான். அந்த வகையில், புத்தாண்டு பிறக்கும்போது காரண, காரியம் இல்லாவிட்டாலும், கார் விலையை உயர்த்துவது கார் நிறுவனங்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயமான விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில், அண்மையில் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்த வழியை பின்பற்றி, நாட்டின் மிகப்பெரிய வாகன குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்து விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 2 முதல் 3 சதவீதம் விலையை கார் நிறுவனங்கள் உயர்த்துவது வழக்கமாக இருக்கிறது.
குறிப்பாக, பிஎஸ்-6 எஞ்சின்களுடன் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் நிச்சயம் விலை உயர்வு கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கார் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக டாடா மோட்டார்ஸ் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார்.
கார் உற்பத்திக்கான செலவீனம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் வருவதால் கார்களின் விலை நிச்சயம் மிக அதிகமாக விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹெக்ஸா, ஹாரியர் என அனைத்து கார் மாடல்களும் விலை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. இதனிடையே, டாடா அல்ட்ராஸ் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் அறிமுக விலை சலுகையுடன் வரும் என்பதால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் எதிர்பார்க்கலாம்.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!