Just In
- 37 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...
டாடா டியாகோ கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய கார்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பு என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தங்கள் மாடல்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.
இதில், இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் முக்கியமானது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான கார்களை வழங்க வேண்டும் என டாடா நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இதற்கேற்ப சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய கார்களை டாடா உற்பத்தி செய்து வருகிறது.
டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான் குளோபல் என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாடா நிறுவனத்தின் ஹாரியர், ஹெக்ஸா உள்ளிட்ட கார்களும் விபத்தில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.
இந்த சூழலில் டாடா நிறுவனத்தின் டியாகோ (Tata Tiago) கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தற்போது டியாகோ காரை டாடா நிறுவனம் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.
ட்யூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (இபிடி), கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (சிஎஸ்சி) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் டாடா டியாகோ காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர கூடுதலாக சீட் பெல்ட் மற்றும் ஸ்பீடு சென்சிங் அலர்ட் சிஸ்டமும் டாடா டியாகோ காரில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா டியாகோ கார் தற்போது 4.40 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) கிடைக்கும்.
அதேசமயம் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டாடா டியாகோ கார் தொடர்கிறது. இந்த சூழலில் டீசல் வெர்ஷனை ஒருவேளை டாடா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎஸ்-6 (BS-VI) மாசு உமிழ்வு விதிமுறைகளை இதற்கு காரணம். மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!