Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ரூ.4,000 கோடியில் எலெக்ட்ரிக் கார் பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைக்கும் டாடா!
ரூ.4,000 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் கார் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஏற்கனவே, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை துவங்கிவிட்டாலும், அதனை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலையில் தருவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியின் விலைதான் அதிகமாக உள்ளது.
இதனை குறைக்கும் விதமாக, லித்தியம் அயான் பேட்டரியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம், தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் இந்த புதிய பேட்டரி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த சிறப்பு முதலீட்டு மண்டலத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்," தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் லித்தியம் அயான் பேட்டரி ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. இதற்காக, 126 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் 10 ஜிகாவாட் பேட்டரியை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதற்காக முதல்கட்டமாக ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனை படிப்படியாக விரிவாக்கம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு மிக குறைவான விலையில் மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் கார் பேட்டரி தயாரிப்புக்கு மத்திய அரசும் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்க இருக்கிறது.
இதனால், லித்தியம் அயான் பேட்டரியை வாங்குவதைவிட டாடா மோட்டார்ஸ் சொந்தமாக உற்பத்தி செய்வதன் மூலமாக விலை கணிசமாக குறையும். இதனால், எலெக்ட்ரிக் கார்களின் விலையை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு டாடா மோட்டார் நிறுவனத்திற்கு கிட்டும்.
அடுத்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விலையில் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் வழங்குவதற்கான வாய்ப்பை இந்த புதிய லித்தியம் அயான் பேட்டரி ஆலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ET Auto
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி