Just In
- 25 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?
தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்படும், அதிலும் வில்லன்களுக்கு மிகவும் பிடித்தமான காருக்கு இந்த ஆண்டில் நிகழவிருக்கும் சோகம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
அண்மைக் காலங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் பிரபலமான சில மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த ஆம்னி மற்றும் ஆல்டோ உள்ளிட்ட சில மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. மாருதி சுஸுகியின் இந்த அறிவிப்பு, அதன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காராக இருந்து வரும் டாடா சுமோவின் உற்பத்தியை முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
டாடா சுமோ பெரும்பாலும், தமிழ் சினிமாவின் சண்டைக் காட்சி அல்லது ஹூரோயினைக் கடத்த செல்வது உள்ளிட்ட சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இந்த கார் பிரபலம் மற்றும் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தையில் பெற்றது. அவ்வாறு, சுமோ ஒரு திரைப்படக் காட்சியில் வருகிறது என்றால், சிங்கிளாக எல்லாம் வராது, ஒரு பட்டாளத்தையே அதனுடன் அழைத்துவரும். அவ்வாறுதான் சினிமா காட்சிகள் அந்த காருக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காரின் உற்பத்தியை முடக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. டாடாவின் இந்த அறிவிப்பால், தமிழ் திரையுலகம் மற்றும் அதன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றே கூறலாம். மேலும், டாடா சுமோவுடன் போல்ட் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியையும் டாடா நிறுவனம் முடக்கியுள்ளது.
டாடா உட்பட வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணமாக புதிய பாதுகாப்பு மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கின்றது. புதிய பாதுகாப்பு விதியானது வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதேபோன்று, மாசு உமிழ்வு புதிய விதிமுறை வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளுக்கு டாடா சுமோ மற்றும் போல்ட் ஈடு கொடுக்காது என்பதன் காரணத்தால் விற்பனையில் இருந்து விலக்கப்படுகின்றன.
டாடா சுமோவை அந்த நிறுவனம், கோல்டன் நிறத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனாக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த காரில் 4 சிலிண்டர் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 84 பிஎச்பி பவரை 3,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். அதேபோன்று, 250 என்எம் டார்க்கை 1,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.7.52 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகியது.
சுமோ உடன் போல்ட் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியையும் டாடா நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த காரினை அந்த நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் எக்ஸ்1 என்ற பழைய மாடல் காரின் பிளாட்பார்மில் வைத்து உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம் நானே, ஜெஸ்ட் மற்றும் சஃபாரி உள்ளிட்ட சில கார்களின் உற்பத்தியையும் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா நிறுவனத்தின்மூலம் பல்வேறு புதிய மாடல்கள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டதால் அதற்கு முன்பாக விற்பனைக்கு வந்த மாடல்களின் விற்பனை கணிசமாக சரிய துவங்கின. ஆகையால், பழைய மாடல் கார்களை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிப்பதைவிட, புதிய மாடல்களை அதிக சக்தி மற்றும் நவீன யுக்திகளுக்கு ஏற்ப தயாரிக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டாடா நிறுவனம் தற்போது டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹேரியர் மற்றும் அல்ட்ராஸ் உள்ளிட்ட புதிய மாடல்களை சந்தையில் களமிறக்கி வருகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!