Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!
அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தாலும், அது தனி நபர் சந்தைக்கானதாக இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், அண்மையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டது. அடுத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், அரசுத் துறை நிறுவனங்களுக்கு டிகோர் மின்சார கார்களை சப்ளை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனிநபர் மார்க்கெட்டிற்கான மாடலையும் அறிமுகம் செய்கிறது.
அடுத்த வாரம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அரசுத் துறை பயன்பாட்டுக்கு வழங்கப்படும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது.
ஆனால், புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும்.
ற்போதைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மோட்டார் 40.23 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்.
டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ரூ.11.58 லட்சம் முதல் ரூ.11.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபேம்-2 மானியத்திட்டத்தின் தள்ளுபடி மூலமாக ரூ.9.96 லட்சம் முதல் ரூ.10.30 லட்சம் விலையில் கிடைக்கிறது. ஆனால், அதிக தூரம் பயணிக்கும் திறனுடன் வரும் புதிய மாடலின் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.