Just In
- 1 hr ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 2 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 3 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- 5 hrs ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்
பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு குறித்து டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டத் தகவல் டெஸ்லா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை பேட்டரியில் இயங்கும் செடான் மற்றும் எஸ்யூவி கார்களை உருவாக்கி விற்பனை செய்து வரும் டெஸ்லா நிறுவனம் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
பேட்டரியில் இயங்கும் டிரக், பஸ், பிக்கப் டிரக் என இந்த பட்டியல் நீள்கிறது. அண்மையில், பேட்டரியில் இயங்கும் மின்சார பிக்கப் ரக வாகனத்தை அறிமுகம் செய்தது. சைபர்டிரக் என்ற பெயரில் மிக வினோதமான டிசைனில் வந்த இந்த பிக்கப் டிரக் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பிக்கப் டிரக்கிற்கு ஏதுவாக, அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் தகவமைப்பு கொண்ட மூன்றுசக்கர ஏடிவி ரக வாகனத்தையும் காட்சிப்படுத்தியது. சைபர்க்வாட் என்ற பெயரில் இந்த ஏடிவி வாகனம் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏடிவி வாகனம் சைபர்டிரக் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் வடிவமைப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.
இந்த நிலையில், ட்விட்டரில் ஒருவர் டெஸ்லா ஏடிவி வாகனம் அறிமுகம் குறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "இந்த வாகனம் டெஸ்லா சைபர்டிரக் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் வாகனத்துடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்லா சைபர்டிர்க் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது இந்த ஏடிவி வாகனமும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2021ம் ஆண்டு இந்த டெஸ்லா சைபர்டிரக் மற்றும் சைபர்குவாட் ஏடிவி வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்த எலெக்ட்ரிக் ஏடிவி வாகனத்தில் இரண்டு பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களை இந்த ஏடிவி வாகனம் பெற்றிருக்கும். டெஸ்லா சைபர்டிரக்கிலிருந்து சார்ஜ் ஏற்றும் வசதியுடன் வர இருக்கிறது.
இந்த பதிலுடன் சேர்த்து, எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு குறித்தும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், தான் 17வயதாக இருக்கும்போது சந்தித்த சாலை விபத்தை குறிப்பிட்டு, பைக்குகள் அபாயகரமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எலெக்ட்ரிக் டர்ட் பைக்கை தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஒழுங்குப்படுத்தப்படாத சாலை பகுதிகளில் நடத்தப்படும் ரேஸ் மற்றும் மிக கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சாகச வகையிலான எலெக்ட்ரிக் டர்ட் பைக் தயாரிக்கும் திட்டத்தை அவர் கையில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ட்விட்டரில் எலான் மஸ்க் தெரிவித்துள்ள இந்த தகவல், டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கான எலெக்ட்ரிக் பைக்கை டெஸ்லா நிறுவனம் உருவாக்கினால் அது நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.