Just In
- 12 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!
தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழ்கின்ற வகையிலான, சிறப்பு நடவடிக்கையில் தமிழக அரசு களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வைலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய வாகனத்துறை. இதற்கு, இத்துறை அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் மிகப் பெரிய வீழ்ச்சியே முக்கிய காரணம்.
மிகப் பெரிய வாகனச் சந்தையாக விலங்கி வந்த இந்திய வாகனத்துறை இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது, நாட்டின் வருவாயில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என துறைசார்ந்த வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதற்கேற்ப வகையில், பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பது, பணியாட்களை வேலையை விட்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இந்திய வாகனத்துறையின் இத்தகைய சூழலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று மின் வாகன ஊக்குவிப்பு.
மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இது நாட்டின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பொதுவாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றில் அதிக மாசை உண்டாக்குகின்றது. இதனால், புவி வெப்பமயமாதல், காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஆனால், மின் வாகனங்கள் அவ்வாறு இல்லாமல், சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பனாக விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும், இவற்றை பராமரிப்பது சுலபம். ஆகையால், குறைந்த செலவில் அதிக பலன் மின் வாகனங்களில் கிடைக்கும்.
மேலும், தற்போது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசு செலவிடும் தொகையும் கணிசமாக குறைக்கப்படும். இதுபோன்ற பல காரணங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக ஃபேம் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். அதற்கேற்ப வகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இத்திட்டத்தின்மூலமே கொண்டுவரப்படுகின்றது.
இந்நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தின்மூலம், பொது பயன்பாட்டிற்கான மின் வாகனங்களை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த ஆங்கில செய்தி தளம் ஆட்டோ எகனாமிக் டைம்ஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அசோக் லேலேண்ட் நிறுவனம் தயாரித்த மின்சார பஸ்களை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், ஃபேம்-2 திட்டத்தின்கீழ் 525 யூனிட் மின்சார பஸ்களை தமிழக அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வரவுள்ளது.
தென் தமிழகத்திலேயே இத்தகையை நடவடிக்கையில் களமிறக்குவது தமிழகம்தான் முதலிடம்.
இதுகுறித்து, எம்டிசி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "சோதனையோட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் ஊழியரே இயக்க உள்ளார். ஆனால், அதில் ஓட்டுநராக எம்டிசி கழகத்தின் பணியாளர் அமர்த்தப்படுவார். மின் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக அந்தந்த பேருந்து பணிமனைகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகையால், தங்கு தடையின்றி மின்சார பேருந்து இயக்கப்படும்" என்றார்.
முன்னதாக, நடப்பாண்டில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ குழுமத்திடம் நிதி பெற்று மாநிலத்தில் மின் வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவிருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில், தற்போது மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் இயக்கும் விதமாக மின்சார பேருந்துகள் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
முக்கியமாக, அவை பாரிஸ்முனை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து சென்னை நகரத்தின் பல இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. பின்னர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!