Just In
- 16 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
திடீரென குறுக்கே வந்த கார்: டிவைடரின்மீது மோதி 10 அடி உயரத்திற்கு பறந்த டொயெட்டா இன்னோவா.. வீடியோ!
குறுக்கே வந்த கார் மீது மோதாத வண்ணம் காரை திருப்பியபோது, சாலையின் டிவைடரில் மோதிய கார் பத்து அடி உயரத்திற்கும் அதிகமாக பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகில் உள்ள மிக ஆபத்தான சாலைகளில் இந்திய சாலைகளே முன்னணி இடத்தில் இருக்கின்றன. இதற்கு தினம்தோறும் அரங்கேறும் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளே முக்கிய சான்று.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராஜ் மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது.
தற்போது, அந்த காட்சிகள்தான் வெளியாகி வாகன ஓட்டிகளை திகிலடைய வைத்துள்ளது. அதற்கேற்பவகையில், அதன் வீடியோக் காட்சிகள் பதபதைக்க வைக்கின்ற வகையில் பயங்கரமானாதாக இருக்கின்றது.
இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தின், ராய்பிப்லா பகுதிக்கு அருகே உள்ள சிறிய கிராமமான குன்வாராவிற்கு அருகில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்து நடைபெற்ற நேரம் பகல் நேரம் என்பது வீடியோவில் இடம்பெற்றிருக்கும் நேரம் உறுதி செய்கின்றது. அதுமட்டுமின்றி, வீடியோவில் சாலை மிகவும் வெறிச்சோடி இருப்பதையும் காட்டுகின்றது.
அந்த நேரத்தில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓர் கார் திரும்புகின்றது. இதையறியாமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா, சாலையைக் கடக்க முயன்ற கார் மீது மோதமால் இருக்க சாலையின் இடப்புறமாக திரும்புகின்றது. ஆனால், அதற்குள்ளாக சாலை ஓரத்தில் இருந்த டிவைடரின் மீது ஏறி, தரையை விட்டு சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரத்தில் பறந்து சென்றது.
தொடர்ந்து, பெட்ரோல் பங்கின் வளாகத்தில் நுழைந்த இன்னோவா தொடர்ச்சியாக பல முறை சாலையில் உருண்டவாறு செல்கின்றது. இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் பார்ப்போரின் இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்திவிடும் வகையில் அமைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய டொயோட்டா இன்னோவா காரில் ஐந்து பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. காரில் அமர்ந்திருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாக விபத்திற்கு பின் அவர்களை மீட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாகவே, பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு ஆங்காங்கே சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
விபத்தில் சிக்கியவர்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என கூறப்படுகின்றது. இவர்கள், கடந்த வருடம் பாரத பிரதமர் மோடி ராய்பிப்லா பகுதியில் திறந்து வைத்த, உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையைப் பார்க்க வந்தபோதே இச்சோகமான சம்பவம் அவர்களுக்கு அரங்கேறியுள்ளது.
தகவலின்படி, அந்த காரில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் பத்து வயது குழந்தை உள்ளிட்டோர் இருந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸுக்கும் அவர்களே அழைப்பு விடுத்து, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்துக்குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அரசு நாட்டில் உள்ள பல முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியினை செய்து வருகின்றது. அந்தவகையில், ஒரு சில சாலைகளில் ஏற்கனவே வேக வரம்பு உயர்த்தப்பட்டு விட்டது. அதிவேகம் எப்போதுமே ஆபத்துதான், இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்றைதான் தற்போது நாம் பார்த்துள்ளோம்.
இதற்கு முன்பாகவும் இதேபோன்று பல அதிர்ச்சி சம்பவங்கள் நாட்டில் நடைபெற்றிருக்கின்றது. அதில், பல இதுபோன்று எதிர்புறத்தில் வரும் வாகனங்களை கவனிக்காமல், வந்த வேகத்திலேயே இடது, வலது என திரும்புவதனாலயே அரங்கேறியுள்ளன.
இதன்காரணமாகவே, வாகனங்களைக் கட்டுபடுத்தக்கூடிய வேகத்தை மட்டுமே இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!