Just In
- 24 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திடீரென குறுக்கே வந்த கார்: டிவைடரின்மீது மோதி 10 அடி உயரத்திற்கு பறந்த டொயெட்டா இன்னோவா.. வீடியோ!
குறுக்கே வந்த கார் மீது மோதாத வண்ணம் காரை திருப்பியபோது, சாலையின் டிவைடரில் மோதிய கார் பத்து அடி உயரத்திற்கும் அதிகமாக பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகில் உள்ள மிக ஆபத்தான சாலைகளில் இந்திய சாலைகளே முன்னணி இடத்தில் இருக்கின்றன. இதற்கு தினம்தோறும் அரங்கேறும் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளே முக்கிய சான்று.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராஜ் மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது.
தற்போது, அந்த காட்சிகள்தான் வெளியாகி வாகன ஓட்டிகளை திகிலடைய வைத்துள்ளது. அதற்கேற்பவகையில், அதன் வீடியோக் காட்சிகள் பதபதைக்க வைக்கின்ற வகையில் பயங்கரமானாதாக இருக்கின்றது.
இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தின், ராய்பிப்லா பகுதிக்கு அருகே உள்ள சிறிய கிராமமான குன்வாராவிற்கு அருகில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்து நடைபெற்ற நேரம் பகல் நேரம் என்பது வீடியோவில் இடம்பெற்றிருக்கும் நேரம் உறுதி செய்கின்றது. அதுமட்டுமின்றி, வீடியோவில் சாலை மிகவும் வெறிச்சோடி இருப்பதையும் காட்டுகின்றது.
அந்த நேரத்தில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓர் கார் திரும்புகின்றது. இதையறியாமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா, சாலையைக் கடக்க முயன்ற கார் மீது மோதமால் இருக்க சாலையின் இடப்புறமாக திரும்புகின்றது. ஆனால், அதற்குள்ளாக சாலை ஓரத்தில் இருந்த டிவைடரின் மீது ஏறி, தரையை விட்டு சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரத்தில் பறந்து சென்றது.
தொடர்ந்து, பெட்ரோல் பங்கின் வளாகத்தில் நுழைந்த இன்னோவா தொடர்ச்சியாக பல முறை சாலையில் உருண்டவாறு செல்கின்றது. இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் பார்ப்போரின் இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்திவிடும் வகையில் அமைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய டொயோட்டா இன்னோவா காரில் ஐந்து பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. காரில் அமர்ந்திருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாக விபத்திற்கு பின் அவர்களை மீட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாகவே, பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு ஆங்காங்கே சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
விபத்தில் சிக்கியவர்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என கூறப்படுகின்றது. இவர்கள், கடந்த வருடம் பாரத பிரதமர் மோடி ராய்பிப்லா பகுதியில் திறந்து வைத்த, உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையைப் பார்க்க வந்தபோதே இச்சோகமான சம்பவம் அவர்களுக்கு அரங்கேறியுள்ளது.
தகவலின்படி, அந்த காரில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் பத்து வயது குழந்தை உள்ளிட்டோர் இருந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸுக்கும் அவர்களே அழைப்பு விடுத்து, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்துக்குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அரசு நாட்டில் உள்ள பல முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியினை செய்து வருகின்றது. அந்தவகையில், ஒரு சில சாலைகளில் ஏற்கனவே வேக வரம்பு உயர்த்தப்பட்டு விட்டது. அதிவேகம் எப்போதுமே ஆபத்துதான், இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்றைதான் தற்போது நாம் பார்த்துள்ளோம்.
இதற்கு முன்பாகவும் இதேபோன்று பல அதிர்ச்சி சம்பவங்கள் நாட்டில் நடைபெற்றிருக்கின்றது. அதில், பல இதுபோன்று எதிர்புறத்தில் வரும் வாகனங்களை கவனிக்காமல், வந்த வேகத்திலேயே இடது, வலது என திரும்புவதனாலயே அரங்கேறியுள்ளன.
இதன்காரணமாகவே, வாகனங்களைக் கட்டுபடுத்தக்கூடிய வேகத்தை மட்டுமே இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!