Just In
- 35 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...
நடப்பாண்டில் 2வது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. டொயோட்டா நிறுவன கார்களின் விலை சற்று அதிகம் என்றாலும் கூட, அவை விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அந்நிறுவன கார்களில் காணப்படும் தரம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.
அதாவது டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி, பார்ச்சூனர் எஸ்யூவி ஆகிய டொயோட்டா நிறுவன கார்களுக்கு இங்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்த சூழலில் தற்போது இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு சில டொயோட்டா கார்களின் விலை விரைவில் அதிகரிக்கவுள்ளது. சில மாடல்களின் விலையை உயர்த்த போவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் எந்ததெந்த மாடல்களின் விலை உயரப்போகிறது? விலை எவ்வளவு அதிகரிக்கவுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான விடை கிடைக்கவில்லை. எனினும் 1-2 சதவீதம் வரை மட்டுமே விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சில ஹை-எண்ட் தயாரிப்புகளின் விலையை டொயோட்டா நிறுவனம் 4 சதவீதம் வரை உயர்த்தியது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே தற்போது டொயோட்டா நிறுவனம் மீண்டும் விலையை உயர்த்துகிறது.
இதனிடையே இந்திய மார்க்கெட்டில் பிரீமியம் எம்பிவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடைபெற்றால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு உள்ளாக, 2 ஹை எண்ட் எம்பிவி ரக கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.