Just In
- 36 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 59 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 4 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலகை அசத்தப்போகும் டொயோட்டாவின் புதிய கார் இதுதான்... மார்க்கெட்டில் கெத்தாக களமிறங்குகிறது...
புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலக அளவில் மிக பிரபலமாக திகழ்கின்றன. டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தற்போது, பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், பார்ச்சூனர், எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும். இன்னோவா கிரிஸ்டா, எம்பிவி ரகத்தை சேர்ந்தது.
பொதுவாக டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் சற்று விலை உயர்ந்தவை. அப்படி இருக்கையில், பட்ஜெட் விலையில் கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் நிறைந்த இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் மாபெரும் வெற்றியை ருசித்து கொண்டிருப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு டொயோட்டா கார்களில் காணப்படும் தரமே முக்கியமான காரணம்.
இதுதவிர டொயோட்டா கார்கள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவும் உள்ளன. விபத்தில் சிக்கினாலும் கூட, பயணம் செய்பவர்களின் உயிரை பெரும்பாலும் காப்பாற்றி விடும். எனவேதான் விலையை பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள் டொயோட்டா கார்களை தேர்வு செய்கின்றனர்.
இந்த சூழலில் தற்போது புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை களமிறக்கும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ-சி (Toyota New Global Architecture) பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஎன்ஜிஏ-சி பிளாட்பார்ம் ஏற்கனவே டொயோட்டா ப்ரையஸ் (Toyota Prius) மற்றும் டொயோட்டா சி-ஹெச்ஆர் க்ராஸ்ஓவர் (Toyota C-HR Crossover) கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், டொயோட்டா சி-ஹெச்ஆர் க்ராஸ்ஓவர் காரானது, ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மார்க்கெட்களில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
டொயோட்டா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி ரக காரை உலக அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிஸான் ஜூக் (Nissan Juke), செவர்லே டிராக்கர் (Chevrolet Tracker), ஹோண்டா ஹெச்ஆர்-வி (Honda HR-V) மற்றும் மஸ்டா சிஎக்ஸ்-3 (Mazda CX-3) உள்ளிட்ட கார்களுடன் டொயோட்டா அறிமுகம் செய்யவுள்ள புதிய எஸ்யூவி ரக கார் போட்டியிடும்.
டொயோட்டா நிறுவனம் இந்த காரை இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்தால், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் சவாலை அளிக்கும். தற்போது இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. எனவே டொயோட்டாவின் புதிய எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானால், நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஹூண்டாய் கிரெட்டா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் டொயோட்டாவின் புதிய எஸ்யூவி ரக கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானால், ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை குறைந்து, அதன் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டொயோட்டா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி காரானது, 2020ம் ஆண்டின் 2வது பாதிக்கு முன்பாக விற்பனைக்கு வராது என கூறப்படுகிறது. அதாவது அதற்கு பின்புதான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக தாய்லாந்துதான் இந்த காரின் முக்கியமான உற்பத்தி கேந்திரமாக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் உலகம் முழுவதும் வேகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மத்திய அரசும் கூட எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவித்து கொண்டிருக்கிறது.
எனவே டொயோட்டாவின் இந்திய துணை நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், வருங்காலங்களில் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு ஹைபிரிட் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!