Just In
- 29 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் மாருதி எர்டிகா, சியாஸ் கார்கள்!
மாருதி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களையும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாருதி எர்டிகா மற்றும் சியாஸ் கார்கள் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய கார் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான முதலீட்டு செலவுகளை வெகுவாக குறைக்கும் விதத்தில், ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகியவை சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து செயல்பட இருக்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில், மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பது மற்றும் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கு இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி, மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து, தற்போது மாருதி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களையும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டொயோட்டா இன்னோவா காருக்கு விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் எர்டிகா போட்டியாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த காரையும் டொயோட்டா நிறுவனமே விற்பனை செய்ய இருக்கிறது.
இதன்மூலமாக, டொயோட்டா பிராண்டு பிரியர்களுக்கு சிறப்பான தேர்வு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், மாருதி நிறுவனத்திற்கும், டொயோட்டா நிறுவனத்திற்கும் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது.
எனவே, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என்று தெரிகிறது. அதேபோல, டொயோட்டா நிறுவனத்தின் பெங்களூர் ஆலையிலும் உற்பத்தி திறன் முழுமையான அளவை எட்டுவதற்கும், கூடுதல் வேலைவாய்ப்பும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர் ஆகிய இரு மாடல்களையும் தாண்டி, பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் சியாஸ் உள்ளிட்ட கார்களின் மூலமாக அடுத்த சில ஆண்டுகளில் டொயோட்டாவின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய மின்சார கார்களை டொயோட்டா பிளாட்ஃபார்மில் உருவாக்குவதற்கும் மாருதி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிட்ட இருக்கிறது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!