Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் மாருதி எர்டிகா, சியாஸ் கார்கள்!
மாருதி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களையும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாருதி எர்டிகா மற்றும் சியாஸ் கார்கள் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய கார் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான முதலீட்டு செலவுகளை வெகுவாக குறைக்கும் விதத்தில், ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகியவை சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து செயல்பட இருக்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில், மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பது மற்றும் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கு இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி, மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து, தற்போது மாருதி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களையும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டொயோட்டா இன்னோவா காருக்கு விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் எர்டிகா போட்டியாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த காரையும் டொயோட்டா நிறுவனமே விற்பனை செய்ய இருக்கிறது.
இதன்மூலமாக, டொயோட்டா பிராண்டு பிரியர்களுக்கு சிறப்பான தேர்வு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், மாருதி நிறுவனத்திற்கும், டொயோட்டா நிறுவனத்திற்கும் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது.
எனவே, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என்று தெரிகிறது. அதேபோல, டொயோட்டா நிறுவனத்தின் பெங்களூர் ஆலையிலும் உற்பத்தி திறன் முழுமையான அளவை எட்டுவதற்கும், கூடுதல் வேலைவாய்ப்பும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர் ஆகிய இரு மாடல்களையும் தாண்டி, பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் சியாஸ் உள்ளிட்ட கார்களின் மூலமாக அடுத்த சில ஆண்டுகளில் டொயோட்டாவின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய மின்சார கார்களை டொயோட்டா பிளாட்ஃபார்மில் உருவாக்குவதற்கும் மாருதி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிட்ட இருக்கிறது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!