Just In
- just now ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பெங்களூரில் அதிரடியாக குறைக்கப்பட்ட போக்குவரத்து அபராதம்! எவ்வளவு குறைந்தது தெரியுமா
புதிதாக அமுலுக்கு வந்த மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெங்களூர் மக்களுக்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தியாக அந்த அபராதத்தை சுமார் 50லிருந்து 80 சதவீதம் குறைத்துள்ளது, கர்நாடக அரசு.
அதிகபடியான அபராதத்தை கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து மக்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தான் இந்த அபராத குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இருந்தாலும் கர்நாடக அரசின் இந்த சட்டத்திற்கு மக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே வந்தவாறு உள்ளன.
சிலரோ இந்த அபராத குறைப்புக்கு வரவேற்று, கர்நாடக அரசு முதலில் தரமான சாலையை அமைப்பதில் தீவிர காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். வேறு சிலரோ இந்த அபராத குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த குறைப்பால் சாலை பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் என புலம்பி வருகின்றனர்.
கர்நாடக மக்களை இவ்வாறு புலம்பி வைத்துள்ள அபராத குறைப்புக்கள் பின்வருமாறு, ரூபாய் 2000 என இருந்த இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் வேக கட்டுப்பாடு அபராதமானது, ரூ.1000 என குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல், மற்ற வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த அபராதம் 4 ரூபாயும் 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் முன்பு ஆயிர ரூபாய் அபராதம். ஆனால் பெங்களூரில் இப்போது 500 ரூபாய் தான்.
சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டினாலும் பெங்களூரில் 1000 ரூபாய் கட்ட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக தான் 500 ரூபாய் என குறைக்கப்பட்டுவிட்டதே. இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் முதல் தடவைக்கு 2 ஆயிர ரூபாயும் அடுத்தடுத்த முறை மாட்டினால் 4 ஆயிரமாகவும் இருந்த அபராதத்தை இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய் எனவும் கனரக வாகனங்களுக்கு 2000 மற்றும் 4000 எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கும் அபராதம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிரடியாக 5000 என மாற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அனுமதியின்றி நுழையும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் என முன்பு இருந்தது. ஆனால் தற்போது முதல்முறை நுழைந்தால் 5000 எனவும் அடுத்தடுத்த தடவைகளுக்கு அபராதமாக அதே 10 ஆயிரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த 2019 ஆண்டிற்கான மோட்டார் வாகன சட்டத்தினால் இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களிடம் நன்மதிப்பை எடுப்பதற்காக கர்நாடக அரசை போல அபராதத்தை குறைக்க முடிவெடுத்து வருகின்றன.