Just In
- 2 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 3 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 5 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 10 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- Movies எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உச்சகட்ட அபராதத்தை பெற்ற லாரி உரிமையாளர்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி டெல்லி போலீஸார் லாரி உரிமையாளருக்கு மிக மிக அதிகளவிலான அபராத தொகையை விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் மிகப்பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதன்மூலம் விதிக்கப்படும் உச்சபட்ச அபரதம்தான்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த புதிய அபராத திட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவந்தது.
இது அறிமுகமமான அன்றிலிருந்து தற்போது வரை நாடே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. இதனை உறுதி செய்யும்வகையில், அண்மைக் காலங்களாக வெளிவந்த அபராதம்குறித்த செய்திகள் இருக்கின்றன.
அந்தவகையில், சமீபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு நாட்டிலேயே அதிகபட்ச அபராதமாக ரூ. 86,500 வழங்கப்பட்டிருந்தது. இத்தகைய உச்சபட்ச அபராதத்தை வழங்க போலீஸார் சில காரணங்களை கூறினர்.
அவை, தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க வைத்தது (ரூ.5 ஆயிரம்). லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது (ரூ.5 ஆயிரம்). அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றியது (ரூ.56 ஆயிரம்). சரக்கை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றது (ரூ.20 ஆயிரம்). பொது விதிமீறல் (ரூ.500). உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக லாரியின் உரிமையாளருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 86,500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.
இச்சம்பவம், ஒடிசா மாநித்தில் உள்ள சாம்பல்பூர் என்ற அரங்கேறியிருந்தது. இத்தகைய அபராதத்தை அசோக் ஜாதவ் என்ற இளைஞருக்கு அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதித்திருந்தனர்.
ஆனால், இதில் வெறும் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. மீத தொகைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
இந்த அதீத அபராதத்தினால் அசோக் ஜாதவ் மிகவும் ஸ்பெஷலான நபராக காணப்பட்டார். ஏனென்றால், அதுவரை இந்தளவிற்கான அபராதத்தை யாரும் பெறவில்லை. ஆகையால், நாட்டின் முதல் அதிகபட்ச அபராதத்தைப் பெற்றவராக அவர் மாறினார்.
இந்நிலையில், அதிகபட்ச அபராதத்தைப் பெற்றதில் அசோக் ஜாதவையே தோற்கடிக்கும் வகையில் ஓர் சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட டிரக்கின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில், அதிகபட்ச லோடை ஏற்றிவந்த குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரமும், அனுமதிக்கப்பட்டதை விட 18 டன் எடையுள்ள கூடுதல் பொருட்களை ஏற்றி வந்ததற்காக ரூ. 36 ஆயிரமும் அந்த லாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு டன்னிற்கும் ரூ. 2 ஆயிரம் என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
இவையனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கான தொகையை ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கட்டும்படி டிரக்கின் உரிமையாளருக்கு கூறப்பட்டுள்ளது.
இந்த டிரக் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் கிஷான் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போக்குவரத்துத் துறையின் அமலாக்க குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையின்போதே டிரக்கின் விதிமீறல்கள்குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு