Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி இவர்கள் லுங்கி, பனியன் அணிய கூடாது: மீறினால் அபராதம்... எவ்வளவு தெரியுமா...?
லுங்கி மற்றும் பனியன் அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. மீறினால், தண்டனையாக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக இந்தியர்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக கயலி எனப்படும் லுங்கி மற்றும் பணியனில் உலா வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
ஏன், நம்மில் பலர்கூட வீட்டில் இருக்கும்போது வெறும் லுங்கியுடன் இருப்பதையே விரும்புகின்றோம். அதேபோல், நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும்போது அரை டிரவுசர் போட்டுக்கொண்டு உல்லாசமாக செல்லுகின்றோம்.
சொகுசாக இருக்கையில் அமர்ந்தவாறு பயணிக்கும் நாமே இவ்வாறு செல்லும்போது, அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் எப்படி இருப்பார்கள் என பார்த்திருக்கின்றீர்களா...? அதிலும், நீண்டதூரம் செல்லும் வாகன ஓட்டுநர்கள், தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, அதிகளவு உடல் உஷ்னத்தை எதிர்கொள்கின்றனர்.
இதனால், பெரும்பாலும் உள் பணியனில் வாகனத்தை இயக்குவதையே விரும்புகின்றனர். அதேபோன்று, லாரி ஓட்டுநர்களைப் பார்த்தோமேயானால், அவர்கள் எப்போதும் கயலி மற்றும் உள் பணியனில் மட்டுமே இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் இரவு, பகல் பாராமல் வாகனத்தை இயக்குகின்றனர்.
மேலும், மற்ற வாகன ஓட்டிகளைக் காட்டிலும் பெரும் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன்காரணமாகவே, அவர்கள் எப்போதும் லுங்கி மற்றும் பணியனில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
ஆனால், இனி இவர்களால் இப்படி காற்றோட்டமான உடையணிந்து செல்ல முடியாது. ஆம், உத்தரபிரதேச மாநில அரசு, வாகன ஓட்டிகள் இனி கட்டாயம் சீருடை அணிந்தே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை வாகன விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் விதமாக மத்திய அரசு அண்மையில் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஓர் அச்சம் கலந்த சூழ்நிலையை நிலவுகின்றது.
ஏனெனில், இதுவரை இந்தியர்கள் காணாத அளவிலான உச்சபட்ச அபராதத்தை புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் விதிக்கின்றது.
அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞர் விதிமீறலில் ஈடுபட்டதன் காரணமாக அவருக்கு ரூ.24 ஆயிரத்திற்கான அபராத தொகை வழங்கப்பட்டது. இவரின் ஸ்கூட்டரோ வெறும் ரூ.16 ஆயிரம் மதிப்புடையது என கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில போக்குவரத்துத்துறை, லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் சீருடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இதனை மீறும்பட்சத்தில் ரூ. 2,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அது எச்சரித்துள்ளது. இது, டிரக்கின் உதவியாளருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர்கள் பணியின்போது சீருடையில் இருக்க வேண்டும் என்பதைனை மோட்டார் வாகன சட்டம் 1939 மற்றும் 1989ன் படி கட்டாயமக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே உத்தரபிரேதச அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேசமயம், முன்னதாக இந்த விதி மீறலுக்கு ரூ. 500 மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், அது தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ன் படி, ரூ. 2,000ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய பள்ள வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் அம்மாநில போக்குவரத்துத்துறை ஏஎஸ்பி பூர்னெந்து சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "சட்டப்படி டிரக், டிராக்டர், கன மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை சீருடை இல்லாமல் இயக்குவது தண்டனைக்குரியதாகும். இவர்கள் கட்டாயம் முழுக்கால் பேண்ட், சீரான சட்டை மற்றும் ஷூ உள்ளிட்டவற்றை அணிந்திருக்க வேண்டும். இந்த சட்டம் உதவியாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் பொருந்தும்" என்றார்.
தொடர்ந்து, இது அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களக்கும் பொருந்தும் என தெரிவித்தார். அத்துடன், அவர்கள் விதிமீறலில் ஈடுபடும் பட்சத்தில் அபராதத்தில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார்கள் என உறுதியாக கூறினார்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?