Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 6 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 7 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...
பசுவை காப்பாற்றுவதற்காக லாரி டிரைவர் ஒருவர் தன் உயிரையே பணயம் வைத்தார். ஹாலிவுட் சினிமா படங்களை விஞ்சும் வகையிலான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதால், அந்த லாரி டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய சாலைகளில் எந்நேரமும் விபத்து அபாயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால்தான், இங்கு சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இன்று, உலகிலேயே விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சாலை விபத்துக்களின் காரணமாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization-WHO) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தவிர சாலை விபத்துக்களுக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இதில், முக்கியமானவை கால்நடைகள். இந்தியாவில் வாகன ஓட்டிகளின் உயிருக்கு கால்நடைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி கொண்டுள்ளன.
பசு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் திடீரென குறுக்கே வந்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, சாலை விபத்து அரங்கேறுகிறது. இதில், சில சமயங்களில் கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த சூழலில் சாலையில் திடீரென குறுக்கே வந்த ஒரு பசுவை காப்பாற்றுவதற்காக, லாரி டிரைவர் ஒருவர் தன் உயிரையே பணயம் வைத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. அதே சமயம் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால், அந்த டிரைவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இதன்படி பசு ஒன்று, சாலையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி சென்று கொண்டிருந்தது. மறுமுனைக்கு அருகே சென்றதும் பசு சாலையில் திடீரென அப்படியே நின்று விட்டது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த சூழலில், லாரி வருவதை கண்ட பசு, உடனடியாக அங்கிருந்து திரும்பி, வந்த திசையிலேயே மீண்டும் ஓட ஆரம்பித்தது. இதனால் குழப்பமான சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில் லாரி பசுவை நெருங்கி விட்டது. லாரி டிரைவருக்கு யோசிக்க ஒரு வினாடி கூட நேரமில்லை.
இருந்தபோதும் மிகவும் துணிச்சலாக செயல்பட்ட லாரியின் டிரைவர், தன் முழு பலத்தையும் உபயோகித்து பிரேக்கை பலமாக அழுத்தினார். இதன் காரணமாக சறுக்கி கொண்டு சென்ற லாரி, சாலையில் அப்படியே 180 டிகிரி கோணத்தில், ஒரு சுற்று சுற்றி நின்றது.
ஹாலிவுட் படங்களையே தூக்கி சாப்பிட்டு விடும் வகையிலான இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. லாரி டிரைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால், பசுவின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் கொஞ்சம் அசந்திருந்தால் லாரி டிரைவர் பெரும் விபத்தில் சிக்கி கொண்டிருக்க கூடும்.
இருந்தபோதும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் பசுவின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்பட்டதால், அந்த லாரி டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. நெட்டிசன்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நல ஆர்வலர்களும் அவரை பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
காண்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோவை பார்ப்பவர்களால், லாரி டிரைவரின் பிரெஸன்ஸ் ஆப் மைன்டை (Presence Of Mind) பாராட்டாமல் இருக்க முடியாது. லாரி வேறு திசையில் விலகி சென்று விடாமல், மிகவும் ஷார்ப் ஆக பிரேக் பிடித்த அவரது டிரைவிங் திறன், சமயோசித உணர்வு, மனிதநேயம் ஆகியவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
இது ஒரு பால் கன்டெய்னர் லாரி ஆகும். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அனேகமாக கன்டெய்னரில் லோடு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஏனெனில் கன்டெய்னரில் லோடு இருக்கும் சமயத்தில், டிரைவர் இப்படி பிரேக் பிடித்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
நமது இந்திய நாட்டு சாலைகளில், பசு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீர் திடீரென குறுக்கே வருவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. நம்மில் பலரும் வாகனங்களை இயக்கி கொண்டிருக்கும்போது, இதனை கண் கூடாக கண்டிருக்க கூடும்.
இதன் காரணமாக பலர் விபத்துக்களிலும் சிக்கியிருக்க கூடும். திடீர் திடீரென குறுக்கே வரும் கால்நடைகள் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், தங்கள் திசைகளை மாற்றி கொண்டு தாறுமாறாக ஓடுவது இந்தியாவில் பொதுவாக நடக்கும் விஷயமாகி விட்டது.
எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குவது நல்லது. ஏனெனில் நமது வாகனத்தின் முன்பு திடீரென எந்த கால்நடை வரும் என்பது நமக்கு தெரியாது. அப்படி ஒருவேளை கால்நடைகள் குறுக்கே வந்தால், கட்டுப்படுத்தும் வேகத்தில் வாகனங்களை இயக்குவது நல்லது.
இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதில், கால்நடை உரிமையாளர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சாலைகளில், சுற்றி திரிவதால்தான் இத்தகைய விபத்துக்கள் நடக்கின்றன. எனவே கால்நடைகளை பாதுகாப்பாக கட்டி வைக்கலாம்.
அப்படி கட்டி வைக்காத கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உரிய முறையில் அமல்படுத்தப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!