Just In
- 58 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டோல்கேட்டில் வைத்து வேல் முருகனை தாக்க முயன்றதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல் வெளியானது...
டோல்கேட்டில் வைத்து வேல் முருகனை தாக்க முயன்றது தொடர்பாக தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், சென்னை நோக்கி ஆடி காரில் சென்று கொண்டிருந்தார். இது வேல் முருகனின் சகோதரருக்கு சொந்தமான கார் என கூறப்படுகிறது. இந்த காரை வேல் முருகனுடைய கார் டிரைவர் பாஸ்கர் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் டோல்கேட்டிற்கு வந்தபோது, சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் காரை திடீரென மறித்துள்ளனர்.
வட மாநிலத்தை சேர்ந்த இந்த மூன்று பேருக்கும் தமிழ் தெரியாது என கூறப்படுகிறது. சுங்க கட்டணம் செலுத்தும்படி, வேல் முருகனின் கார் டிரைவர் பாஸ்கரிடம் அவர்கள் மிக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த காருக்கான சுங்க கட்டணம், பாஸ்ட் டேக் (FASTag) முறையில் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தது.
பாஸ்ட் டேக் என்பது டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு நடைமுறையாகும். கட்டணம் செலுத்திவிட்டு கடந்து செல்வதற்காக, கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள், டோல்கேட்களில் ஒருசேர அணிவகுத்து நிற்பதை நீங்கள் பலமுறை பார்த்திருக்க கூடும்.
குறிப்பாக வார விடுமுறை தொடங்கும் மற்றும் முடியும் நாட்களில், சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வாகனங்களால் டோல்கேட்களில் மிக கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை காலங்கள் தொடங்கும் மற்றும் முடியும் சமயங்களிலும் இதே நிலைதான். குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல நீண்ட நேரம் ஆகிறது.
விரைவாக செல்ல முடியும் என்ற காரணத்தால்தான் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளையே தேர்வு செய்கின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலம் மிச்சம் பிடிக்கப்பட்ட நேரத்தை, டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும்போது வாகன ஓட்டிகள் இழந்து விடுகின்றனர்.
இந்த பிரச்னையை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்தான் பாஸ்ட் டேக். நீங்கள் இந்த முறையில் இணைந்து விட்டால், உங்களுக்கு பாஸ்ட் டேக் கார்டு ஒன்று வழங்கப்படும். அதனை வாகனத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் ஒட்டி கொள்ள வேண்டும். செல்போன் போன்று இந்த கார்டை ப்ரீபெய்டு (Prepaid) முறையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் ரீ சார்ஜ் செய்து கொள்ள முடியும். பாஸ்ட் டேக் திட்டத்தில் இணைந்த வாகனங்களில் கடந்து செல்வதற்காக, டோல்கேட்களில் தனியாக பாஸ்ட் டேக் லேன் (FASTag Lane) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேனில் டேக் ரீடர் (Tag Reader) ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
உங்கள் வாகனம் இந்த லேனில் நுழைந்த உடன், ஆர்எஃப்ஐடி எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பம் (Radio frequency Identification technology-RFID) மூலமாக, வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்ட் டேக் கார்டை, டேக் ரீடர் ஸ்கேன் செய்யும். இதன்பின் நீங்கள் ஏற்கனவே ரீ சார்ஜ் செய்து வைத்துள்ள தொகையில் இருந்து, அந்த டோல்கேட்டிற்கு உண்டான கட்டணம் ஆட்டோமெட்டிக்காக கழித்து கொள்ளப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் நொடிப்பொழுதில் நடைபெற்று விடும். நீங்கள் ரீ சார்ஜ் செய்து வைத்துள்ள தொகை தீர்ந்தவுடன் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பாஸ்ட் டேக் கார்டின் வேலிடிட்டி மொத்தம் 5 ஆண்டுகள் ஆகும். முதலில் ஒரு முறை வாங்கிய பின்பு தேவைப்படும் நேரங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
பாஸ்ட் டேக் திட்டம் மூலமாக பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. முதலில் கட்டணம் செலுத்துவதற்காக மற்ற வாகன ஓட்டிகளுடன் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு லேனில் நுழைந்து, சென்று கொண்டே இருக்கலாம். எனவே நேரம் மிச்சம் ஆகிறது.
அத்துடன் கட்டணம் செலுத்த காத்திருக்கும்போது வாகனம் இயங்கினால் வீணாகும் எரிபொருளும் மிச்சம் பிடிக்கப்படுகிறது. இதுதவிர வாகன ஓட்டிகள் கையில் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கணக்கில் பேலன்ஸ் குறைவாக இருந்தால் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
அத்துடன் டோல்கேட்களில் கழிக்கப்படும் கட்டணங்கள் குறித்த எஸ்எம்எஸ்களும் உங்கள் மொபைல் போனுக்கு வந்துவிடும். இவ்வாறு செயல்படும் பாஸ்ட் டேக் முறையில்தான் வேல் முருகனின் காருக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆத்தூர் டோல்கேட்டிற்கு முன்பாக உள்ள திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட்களில் அவரது கார் ஸ்கேன் செய்யப்பட்டு எவ்வித பிரச்னையும் இல்லாமல் வந்துள்ளது.
ஆனால் ஆத்தூர் டோல்கேட்டில் அவரது காரை ஊழியர்கள் வழிமறித்து கட்டணம் செலுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஸ்ட் டேக் குறித்து எடுத்துக்கூறியும், அதற்கான ஆவணங்களை காண்பித்தும் அவர்கள் ஏற்று கொள்வதாக இல்லை. அவர்களுக்கு மொழி தெரியாததால், இந்த பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் சிலர் அங்கு வந்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். ஆனால் அப்போது வட மாநிலத்தை சேர்ந்த டோல்கேட் ஊழியர்கள், வேல் முருகனின் கார் டிரைவர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க சென்ற வேல் முருகனையும் அவர்கள் தாக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், டோல்கேட் ஊழியர்களை மூன்று பேரையும் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு, செல்போன் வாயிலாக வேல் முருகன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து டோல்கேட்களை அகற்ற வேண்டும் என மக்களை திரட்டி கடந்த 7 ஆண்டுகளாக போராடி வரும் வேல் முருகனின் உயிருக்கே இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதே சுங்கச்சாவடியில் இதே ஹிந்திக்காரர்கள் தனியாக வந்தபோது என்னை வழிமறித்து தாக்க முயற்சி செய்தார்கள்.
நான் எனது தொண்டர்கள் அல்லது நண்பர்களுடன் வரும்போது அவர்கள் எவ்வித தகராறும் செய்வதில்லை. ஆனால் நானும், என் ஓட்டுனரும் மட்டும் தனியாக வரும்போது இதோடு மூன்றாவது முறையாக என் வண்டியை மறித்து தாக்கியிருக்கிறார்கள். என்னை தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எனது ஓட்டுனரை தாக்கியிருக்கிறார்கள்.
தமிழர் உரிமைகளுக்காக போராடி வருவதால், ஹிந்திக்காரர்களால் அடையாளம் காட்டப்பட்டு என் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்படுகிறது. டோல்கேட்களில் தமிழர்கள்தான் இருக்க வேண்டும். ஹிந்திக்காரர்கள் இருக்க கூடாது. இதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட வேண்டும்.
சுங்க கட்டணம் ஏன் வசூலிக்கப்படுகிறது? சாலை வரிக்காக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் காரை வாங்கும்போதே அதன் விலைக்கு ஏற்ப சாலை வரி செலுத்தி விடுகிறோம். செலுத்திய பிறகும் கொள்ளையடிப்பது அநியாயம் இல்லையா? எனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு வேல் முருகன் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்தியின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
முன்னதாக தமிழ்நாடு மாநில அரசுப்பணிகளில் வெளி மாநிலத்தவரை நியமிப்பதற்கு, வேல் முருகன் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வாகன ஓட்டிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள டோல்கேட்களுக்கு எதிராகவும் அவர் மிக நீண்ட காலமாக போராடி கொண்டிருக்கிறார்.