Just In
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சட்டத்தின் பார்வையில் அனைவரும் ஒன்றே... முதலமைச்சராகவே இருந்தாலும் சரி... அமைச்சர் அதிரடி!
சட்டத்தின்முன் அனைவரும் ஒன்றே. ஆகையால், எந்த வாகனமாக இருந்தாலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அத்துறை அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை பல மாநிலங்கள் வரவேற்றாலும், ஒரு சில மாநிலங்கள் முழுமையாக வரவேற்கவில்லை. ஆகையால், இதற்கு ஒருசேர வரவேற்பும், எதிர்ப்பும் நிலவி வருகின்றது.
இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்துள்ளது. ஆகையால், இது சமானியர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறி ஒரு சில மாநிலங்கள் புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன.
மேலும், ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை குறைத்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்க திட்டமிட்டுள்ளன.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தை விதிப்பதை மூலதனமாகக் கொண்டிருந்தாலும், நாட்டை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகையால், பல மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அந்த மாநில போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் நிரலா, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் விட்டு விடாதீர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஐபிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என யாருடைய வாகனமாக இருந்தாலும், கட்டாயம் நிறுத்தி வாகனம்குறித்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னரே அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக" தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம், அது அமைச்சர் அல்லது முக்கிய அதிகாரி என யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்" என்று கூறினார்.
ஆகையால், அம்மாநில போக்குவரத்து செயலாளர், அரசாங்க வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டு, விதிகளின் படி தவறு செய்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் கூட முறைகேட்டில் ஈடுபடுவதுண்டு. ஆகையால், அரசு வாகனங்களைக் கூட ஆய்வு மேற்கொள்ள போக்குவரத்துத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
ஆகையால், மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 146ன் கீழ் விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிமீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?