Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சட்டத்தின் பார்வையில் அனைவரும் ஒன்றே... முதலமைச்சராகவே இருந்தாலும் சரி... அமைச்சர் அதிரடி!
சட்டத்தின்முன் அனைவரும் ஒன்றே. ஆகையால், எந்த வாகனமாக இருந்தாலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அத்துறை அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை பல மாநிலங்கள் வரவேற்றாலும், ஒரு சில மாநிலங்கள் முழுமையாக வரவேற்கவில்லை. ஆகையால், இதற்கு ஒருசேர வரவேற்பும், எதிர்ப்பும் நிலவி வருகின்றது.
இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்துள்ளது. ஆகையால், இது சமானியர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறி ஒரு சில மாநிலங்கள் புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன.
மேலும், ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை குறைத்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்க திட்டமிட்டுள்ளன.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தை விதிப்பதை மூலதனமாகக் கொண்டிருந்தாலும், நாட்டை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகையால், பல மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அந்த மாநில போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் நிரலா, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் விட்டு விடாதீர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஐபிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என யாருடைய வாகனமாக இருந்தாலும், கட்டாயம் நிறுத்தி வாகனம்குறித்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னரே அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக" தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம், அது அமைச்சர் அல்லது முக்கிய அதிகாரி என யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்" என்று கூறினார்.
ஆகையால், அம்மாநில போக்குவரத்து செயலாளர், அரசாங்க வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டு, விதிகளின் படி தவறு செய்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் கூட முறைகேட்டில் ஈடுபடுவதுண்டு. ஆகையால், அரசு வாகனங்களைக் கூட ஆய்வு மேற்கொள்ள போக்குவரத்துத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
ஆகையால், மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 146ன் கீழ் விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிமீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!