Just In
- just now கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 33 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
Don't Miss!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடும் அதிர்ச்சி... முறைகேட்டில் ஈடுபட்ட ஹூண்டாய் நிறுவனம் வசமாக சிக்கியது... என்னவென்று தெரியுமா?
முறைகேட்டில் ஈடுபட்ட ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடுமையான தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்தி வருகின்றன. எனவே பல்வேறு நாடுகளின் அரசுகளும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கடுமையான உமிழ்வு தரநிலைகளும் (Emission Standards) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் லாபம் ஈட்டும் நோக்கத்தில், பல்வேறு நிறுவனங்கள் இதனை மீறி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள முன்னணி நிறுவனங்களும் கூட விதிவிலக்கு அல்ல.
இந்த சூழலில், உமிழ்வு தரநிலைகளை மீறியது தொடர்பான புகாரில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிக்கியது. இதற்காக தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அமெரிக்கா உள்பட உலகின் ஏராளமான நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், 2012-2015ம் ஆண்டுகளுக்கு இடையே ஹூண்டாய் நிறுவனம் அமெரிக்காவில், சுமார் 2,300 கனரக கட்டுமான வாகனங்களை (Heavy Construction Vehicles) இறக்குமதி செய்தது.
டீசல் இன்ஜின்களுடன் அவை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அமெரிக்க உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அவை இல்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு புகார் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின் அந்த நிறுவனம் ஹூண்டாய் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிரடியாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அசுத்தமான டீசல் இன்ஜின்களுடன் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஹூண்டாய் நிறுவனத்திற்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் விதிகளை மீறி, அசுத்தமான டீசல் இன்ஜின்களை சட்டவிரோதமாக இறக்குமதி மற்றும் விற்பனை செய்ததற்காக, ஹூண்டாய் நிறுவனம் 47 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று முன் தினம் (செப்டம்பர் 19) அதிரடியாக அறிவித்துள்ளனர்.
மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மட்டுமல்லா உலகின் பல்வேறு நாடுகளும் மாசு உமிழ்வு விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்கள் வெளியிடும் புகை மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?