Just In
- 9 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மேஜிக் செய்த கோவா அரசு... மந்தநிலை நிலவும் சூழலில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... எப்படி தெரியுமா?
கோவா அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவும் சூழலிலும், வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இது போதாத காலம். கார் மற்றும் டூவீலர் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் என ஆட்டோமொபைல் துறையில் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு மட்டுமல்லாது, ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், கோவாவும் ஒன்று.
கோவா மாநில அரசானது, புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு அளித்துள்ளது. சாலை வரியில் 50 சதவீத விலக்கு என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, கோவாவில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன் சாலை வரி மூலம் கிடைக்கும் கலெக்ஸனும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு என்ற உத்தரவு கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியானது. இதன் பின்பு கடந்த அக்டோபர் 18ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை கோவா மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன் வரிகள் மூலமாக 4.2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சாலை வரி குறைப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய வாகனங்களின் விற்பனை நிலவரம் மற்றும் சாலை வரி வசூல் தொடர்பான விபரங்களை போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ பகிர்ந்துள்ளார். இவை கோவா ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தால் தரப்பட்டவையாகும். செப்டம்பர் 18-26 கால கட்டத்தின் எண்களை அக்டோபர் 18-26 காலகட்டத்துடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''செப்டம்பர் 18-26 வரையிலான கால கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 280 மட்டுமே. ஆனால் சாலை வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, அக்டோபர் 18-26 காலகட்டத்தில் 833 நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
அதேபோல் செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் சாலை வரியாக 1,99,62,187 ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. ஆனால் சாலை வரி குறைப்பு அறிவிப்புக்கு பிந்தைய அக்டோபர் 18-26 கால கட்டத்தில் இது 3,63,52,469 ரூபாயாக உயர்ந்துள்ளது'' என்றார். நான்கு சக்கர வாகனங்களை போல் இரு சக்கர வாகனங்களும் இதேபோன்ற டிரெண்டை காட்டியுள்ளன.
அதாவது செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 808 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அக்டோபர் 18-26 வரையிலான கால கட்டத்தில் 1,555 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களின் விற்பனை மட்டுமல்லாது அதன் மூலமாக கிடைக்கும் சாலை வரி வருவாயும் அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 54,37,077 ரூபாயாக இருந்த சாலை வரி வருவாய் அக்டோபர் 18-26 கால கட்டத்தில் 57,12,629 ரூபாயாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு சாலை வரி குறைப்பு மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகை காலமும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!