Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஒரே மேடையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய கார்கள் அறிமுகமாக வாய்ப்பு
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் என்ற பிரத்யேக நிகழ்ச்சியை முதல்முறையாக இந்தியாவில் நடத்துவதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான ஜெனிவா, பிராங்க்ஃபர்ட், பாரிஸ் ஆகிய ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு முதல் நாள் இரவு ஃபோக்ஸ்வேகன் பிரத்யேக நிகழ்ச்சியை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த பிரத்யேக நிகழ்ச்சியில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் பல புதிய கார் மாடல்கள் வெளியிடப்படும்.
ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த நிகழ்ச்சி பத்திரிக்கையாளர்கள் மற்றும் கார் பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆடி, பென்ட்லீ, போர்ஷே என ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் பல முன்னணி கார் பிராண்டுகளின் புதிய கார் மாடல்களை ஒரே இடத்தில் காண்பதற்கான பெரும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்து வருகின்றன.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் டெல்லி அருகே நொய்டாவில் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. முதல்முறையாக இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில், போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார், ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார், புதிய பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் புதிய கான்செப்ட் கார் மாடல்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும்.
எனவே, முதல்முறையாக இந்தியாவில் நடக்க இருக்கும் ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் புதிய எஸ்யூவி மாடல்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்த நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படும் புதிய கான்செப்ட் கார் மாடல்கள் வரும் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
எனினும், விரைவில் இதற்கான அழைப்பு பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அப்போது இதுகுறித்த முழுமையானத் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு