Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு... கார்களை திரும்ப அழைக்கும் வால்வோ!
எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதையடுத்து, வால்வோ சொகுசு கார்களுக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை வால்வோ பெற்றிருக்கிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் தயாரிக்கப்பட்ட வால்வோ டீசல் கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வால்வோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எஸ்60, எஸ்80, வி40, வி70, வி90, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய கார்களின் எஞ்சின் பகுதியில் உள்ள குறைபாட்டால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எஞ்சினின் இன்டேக் பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் பாகம் அதிக சூடாகும்போது உருகி, தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அரிதாக நிகழும் என்றாலும், முன்னெச்சரிக்கையாக அதனை சரிசெய்து தருவதற்கு வால்வோ முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, கார்களில் உள்ள பிரச்னையை ஆய்வு செய்து சரிசெய்வதற்காக திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை வால்வோ திரும்ப அழைக்க இருக்கிறது.
உலக அளவில் 5.07 லட்சம் கார்களை வால்வோ நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது. இந்தியாவில் 3,000 கார்களை திரும்ப அழைத்து ஆய்வு நடத்த இருக்கிறது வால்வோ கார் நிறுவனம். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்ப உள்ளது வால்வோ.
காரின் எஞ்சின் பகுதியிலிருந்து வித்தியாசமான வாடை எதுவும் வந்தால் உடனடியாக காரை சர்வீஸ் மையத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ள இருப்பதாக வால்வோ கூறி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.