Just In
- 15 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 45 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உலகின் மிகச்சிறிய கார் இதுதான்... இந்திய இளைஞரின் விடாமுயற்சிக்கு கிடைக்கப்போகும் பரிசு 'தடை'
உலகின் மிகச்சிறிய மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை இந்திய இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு (Maruti Suzuki Gypsy) பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டாலும், இன்றளவும் ஆஃப் ரோடு ஆர்வலர்களின் முதல் சாய்ஸ் ஜிப்ஸிதான்.
மாருதி சுஸுகி ஜிப்ஸியை, இந்திய ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும் சொல்லலாம். கடந்த 1991ம் ஆண்டில் இருந்து மாருதி சுஸுகி ஜிப்ஸியை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. தற்போது கூட இந்திய ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான ஜிப்ஸிக்கள் உள்ளன.
இந்த சூழலில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்த ஜாகிர் கான் என்பவர், மினி ஜிப்ஸி ஒன்றை உருவாக்கியுள்ளார். அனேகமாக இதுதான் உலகின் மிகச்சிறிய மாருதி சுஸுகி ஜிப்ஸியாக இருக்க கூடும். இது ''ஹோம் மேட்'' என்பதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சம்.
வழக்கமான கார்களை மாடிபிகேஷன் (Modification) செய்வதில், ஜாகிர் கானுக்கு ஆர்வம் அதிகம். இந்த ஆர்வம் காரணமாகவே, கார் மாடிபிகேஷனில் அவரால் நிபுணத்துவம் பெற முடிந்துள்ளது. தற்போது அவர் உருவாக்கியுள்ள மினி ஜிப்ஸியின் சிறப்பம்சங்களும் அசத்தலாகதான் உள்ளன.
ஜாகிர் கான் வடிவமைத்துள்ள மினி ஜிப்ஸியில், ஷிபானி டால்பின் ஹேட்ச்பேக் வகை காரினுடைய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது என்ன ஷிபானி டால்பின் என்ற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம். ஷிபானி டால்பின் என்ற கார் கடந்த 1982ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. என்றாலும் இந்த மினி ஜிப்ஸியை உந்தி தள்ள தற்போது அதன் இன்ஜின் பயன்பட்டுள்ளது. இது 848 சிசி, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஷிபானி டால்பின் காரின் இன்ஜின் அப்படியே மினி ஜிப்ஸியில் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவான ஆக்ஸலரேஷனுக்காக இந்த இன்ஜினில் சில மாற்றங்களை ஜாகிர் கான் செய்துள்ளார்.
ஜாகிர் கான் உருவாக்கியுள்ள மினி ஜிப்ஸியின் உயரம் 3 அடி மட்டுமே. இதனால் சாலைகளில் அனைவரின் கவனத்தையும் இது ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் இந்த மினி ஜிப்ஸியை ஜாகிர் கான் உருவாக்கியுள்ளார். காரை பார்த்தவுடன் அது நமக்கு புரிந்து விடுகிறது.
இந்த மினி ஜிப்ஸியில் மொத்தம் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2 இருக்கைகள் கேபினுக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 இருக்கைகள், பின் பகுதியில் திறந்தவெளியில் உள்ளன. இதில், பின் பகுதி இருக்கைகளை தேவைக்கு ஏற்ப நீக்கவும், அட்டாச் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த மினி ஜிப்ஸியின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாப் ஸ்பீடை எட்ட மிக நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது என்பது இதன் குறைபாடாக கருதப்படுகிறது. அதேபோல் 4 வீல் டிரைவ் (4WD) சிஸ்டம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஷிபானி டால்பின் இன்ஜினை கொண்டு, உலகின் மிகச்சிறிய ஜிப்ஸியை வடிவமைத்ததற்காக, கின்னஸ் உலக சாதனைக்கு ஜாகிர் கான் விண்ணப்பிக்க உள்ளார். தற்போது யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி இந்த மினி ஜிப்ஸியை ஜாகிர் கான் பொது சாலைகளில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்.
பிரகாசமான நியான் பச்சை நிறத்தில் இந்த மினி ஜிப்ஸி பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறமும் கூட அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் வகையில்தான் உள்ளது. இதன் முன்பகுதி க்ரில்லில் சுஸுகி லோகோ பொருத்தப்பட்டுள்ளது.
கார்டாக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இதன் இன்டீரியர்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இதுவும் பார்ப்பதற்கு அருமையாகதான் உள்ளது. இந்த மினி ஜிப்ஸியின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இப்படி பல்வேறு வழிகளில் ஆல்டர் செய்வதில் ஆர்வமும், திறமையும் மிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட போகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
ஆம், வாகனங்களை ஆல்டர் செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இளைஞர்களின் ஆர்வத்திற்கு இடையேயும், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.