Just In
- 2 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 49 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாட்டிலேயே ஐந்து பேர் மட்டுமே பயன்படுத்தும் மிகஅதிக விலையுடைய கார்! இவரும் இந்த பட்டியல்ல இருக்காரா?
ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக இருக்கும் கல்லினன் எஸ்யூவி ரக காரை இந்தியாவிலேயே ஐந்தே 5 செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் யார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாரம்பரிய தோற்றத்தில் சொகுசு கார்களை உற்பத்தி செய்வதில் கொடிக்கட்டி பறந்து வருகின்றது. இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலக செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதனாலயே இந்நிறுவனம் தனக்கென தனி கொள்கையை வைத்து கார்களை விற்பனைச் செய்துவருகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் கல்லினன் என்ற அதிக சொகுசு வசதிகளைக்கொண்ட எஸ்யூவி ரக கரை கடந்த 2018ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவரும் முதல் எஸ்யூவி ரக கார் இதுதான். இதற்கு முன்பாக இந்நிறுவனம் எஸ்யூவி ரகத்தில் எந்தவொரு காரையும் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்த காருக்கு மிகப்பெரிய சிறப்பாக உள்ளது.
இது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து எஸ்யூவி கார்களையும்விட மிக மிக அதிக விலைக் கொண்ட காராகும். இதன் விலை அனைவரையும் தலை சுற்ற வைக்கின்ற வகையில் உள்ளது. அப்படி என்ன விலை என்றுதானே கேட்கிறீர்கள்....
ரோல்ஸ் ராய் நிறுவனம் இந்த கல்லினன் காருக்கு ரூ. 6.95 கோடி என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இதில், வழங்கப்பட்டுள்ள பல்வேறு லக்சூரி வசதிகளின் காரணமாக இத்தகைய விலையை அந்நிறுவனம் கல்லினன் எஸ்யூவி காருக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, இந்த காரின் கேபின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பல நட்சத்திரங்கள் கொண்ட சொகுசு விடுதிகளில்கூட காணப்படாத அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த காரில் பயணிக்கும்போது காருக்கு வெளியே உள்ள சத்தம் சிறு துளிகூட கேட்காது. அந்தளவிற்கு கல்லினனின் கதவுகள் உட்பகுதியை இருக்கமாக சீல் செய்கின்றன. ஆகையால், கல்லினன் காரில் பயணிக்கும்போது பேரமைதி நிலவும் என்பதில் சிறு துளியளவும் சந்தேகமில்லை.
தொடர்ந்து, இந்த காரில் பயணிக்கும்போது கடுகளவும் அசௌகரியமான உணர்வு ஏற்படாது. அதற்கேற்ப, பல்வேறு சொகுசு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாகவே, இந்த காரை வாங்குபவர்களும் பிரபலமான நபர்களில் ஒருவர்களாக மாறிவிடுகின்றனர்.
அந்தவகையில், இந்தியாவை பூர்வ குடியாக கொண்ட ஐந்தே 5 பேர் மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றிருக்கின்றனர். இதில், ஒரு சிலர் மட்டும் இந்தியாவிற்கு அப்பால் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் இந்தியர்களே. அவர்கள் யார் என்பதைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.
ரியூபென் சிங்
இந்தியாவின் பூர்வ குடியான ரியூபென் சிங், தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர் ஒருவர் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்துள்ளார். இவர் மிகவும் வெறித்தனமான கார் பிரியர் ஆவார். இதற்கு அவரின் கார் நிறுத்துமிடமே சான்றாக உள்ளது.
குறிப்பாக, ரியூபென் சிங்கின் கராஜில் புகாட்டி வெரோன் போன்ற அதீத திறன் கொண்ட கார்கள் பல காட்சியளிக்கின்றன.
ரியூபென், தனது கார்களை அணிகலன் என கூறுகின்றார். மேலும், தன்னிடத்தில் இருக்கும் விலையுயர்ந்த கார்களுக்கு பிரபலமான நகைகளின் நிறத்தைக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றார். குறிப்பாக, ரூபி, எமர்லேண்ட் மற்றும் சஃபையர் உள்ளிட்ட நிறங்களை கார்களுக்கு வழங்கியுள்ளார்.
சமீபத்தில் ரியூபென் அவரது கராஜில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆகிய இரு மாடல்களிலும் தலா மூன்றென மொத்தமாக 6 கார்களை களமிறக்கியுள்ளார். ஜூவல் கலெக்சன் என்ற பெயரில் வாங்கப்பட்ட இந்த கார்களுக்கு மேற்கூறிய அணிகலன்களின் நிறத்தை வழங்கி கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார்.
பூஷன் குமார்
இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியமான தொழிலதிபர்களில் பூஷன் குமாரும் ஒருவர். இவர்தான், நாட்டிலேயே முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை வாங்கியவர் ஆவார். இவர், டீ-செரீஸ் நிறுவனத்தின் எம்டி ஆவார். இதுமட்டுமின்றி திரைப்படங்களின் தயாரிப்பாளாரகவும் இருந்து வருகின்றார். இதுபோன்ற திரைத்துறையில் பல ரோல்களை அவர் கொண்டுள்ளார்.
இவர், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட காரைப் பயன்படுத்தி வருகின்றார். இது, அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அபினி ஷோஹன் ராய்
அபினி ஷோஹன் ராயும் இந்தியாவில் கல்லினன் காரை வாங்கிய முதல் நபராக போற்றப்படுகின்றார். ஏனென்றால், பெண் பாலினத்தில் இந்த காரை வாங்கிய முதல் நபர் இவரே. இதன்காரணமாகவே, இந்தியாவில் இவரும் தற்போது நட்சத்திர நபராக மாறியிருக்கின்றார்.
இவரின் கணவர் துபாயில் மிகப்பெரிய தொழில்முனைவராக இருந்து வருகின்றார். இவர்களின் சில்வர் ஜூபிலி திருமண தினத்தை முன்னிட்டு இந்த பரிசை கணவர் வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த, சர்வதேச சந்தையில் ரூ. 2.2 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதனை இந்தியாவிற்காக ஏற்றுமதி செய்யும்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வரி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு மிகப்பெரிய தொகையாக உருமாறிவிடுகின்றது.
ஆனந்த் அம்பானி:
அம்பானி குடும்பத்தினரிடம் பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. ஆனால், இதில் புதிய வரவாகவும், அதிக சிறப்பு கொண்ட காராகவும் ரோல்ய் ராய்ஸ் கல்லினன் காட்சியளிக்கின்றது. இந்த காரை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அம்பானி குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும், 2020ம் ஆண்டிலேயே பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு, சமீபத்தில் இந்த கல்லினன் காரில் ஆனந்த் அம்பானி வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.
தற்போது ஆனந்த் அம்பானி கைவசம் இருக்கும் இந்த கார் அவரது பயன்பாட்டிற்காகவே வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், குறிப்பிட்ட கஸ்டமைசேஷனைச் செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சொகுசு வசதி கஸ்டமைசேஷனால் ஏற்கனவே பல மடங்கு விலையைக் கொண்டிருக்கும் கல்லினன் மிகமிக விலையயுர்ந்த மாடலாக மாறியிருக்கின்றது.
அஜய் தேவ்கன்
பெரும் தொழிலதிபர்களைப் போலவே பாலிவுட் திரைப்பட பிரபலமான அஜய் தேவ்கனும் ரோல்ஸ் ராய்ஸின் இந்த சிறப்புமிக்க காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே திரை நட்சத்திரமாக வலம் வந்த அஜய் தேவ்கன் இந்த கல்லினன் காரின் மேலும் சிறப்பைச் சேர்த்துள்ளார்.
இதுதவிர, அஜய் தேவ்கனிடம் கூடுதலாக பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. குறிப்படும் வகையில், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர், மினி கூபர், பிஎம்டபிள்யூ இசட்4 மற்றும் பல கார்களை அவர் வைத்திருக்கின்றார்.
நடிகர் அஜய் தேவ்கனுக்கு கார்கள்மீதுள்ள அதீத ஆர்வமே இத்தகைய செயல்பாட்டிற்கு காரணமாக கூறப்படுகின்றது. இதனாலயே ஏராளமான கார்களை அவர் வாங்கி குவித்து வருகின்றார்.
ஆனால், அவையனைத்தைக் காட்டிலும் அதிக ஆடம்பரமான காராக ரோல்ஸ் ராய்ஸின் கல்லினன் காட்சியளிக்கின்றது. ஆகையால், அஜய் தேவ்கனும் இந்த பட்டியலில் இருக்கின்றாரா என்ற ஆச்சரியம் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கின்றது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!