Just In
- 50 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சரவெடி! தொடர்ச்சியாக 5 புதிய கார்களை களமிறக்க பிரபல நிறுவனங்கள் திட்டம்... எந்த நிறுவனம், எப்போது..?
இரு பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஐந்து புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த நிறுவனம் எந்தெந்த கார்களைக் களமிறக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவிற்காக 2.0 திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய இரு நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன. இதன்படி வருகின்ற 2021ம் ஆண்டில் ஐந்து புத்தம் புதிய கார்களை அவை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இதில், புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்கு வரவிருக்கும் மாடல்களும் அடங்கும். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
ஸ்கோடா ஆக்டோவியா ஃபேஸ்லிஃப்ட்:
ஸ்கோடா நிறுவனத்தின்கீழ் இந்தியாவில் விரைவில் புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவிருக்கும் கார்களில் ஸ்கோடா ஆக்டோவியாவும் ஒன்று. இது ஓர் பிரீமியம் செடான் ரக காராகும். இதனைப் புதுப்பித்தலின் மூலம் கூடுதல் பிரீமியம் வசதிகள் கொண்ட காராக ஸ்கோடா மாற்றி வருகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் கடந்த செப்டம்பர் மாதமே இந்தியாவில் அறிமுகமாகிவிடும் என கூறப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இதன் அறிமுகம் தள்ளி போனது. தற்போது அடுத்த வருடம் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் புதுப்பித்தல் பணிகளின் அடிப்படையில் தோற்றம் மற்றும் அணிகலன்கள் உள்ளிட்ட சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி அடிப்படையிலான விஷன் ஐஎன் கான்செப்ட்:
ஸ்கோடா தற்போது விற்பனைச் செய்து வரும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களின் அடிப்படையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனையே விஷன் ஐஎன் என்ற கோட் பெயரில் அது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக இது அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த காரையே விரைவில் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகமும் 2021 ஆண்டிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கும் இக்கார், தொழில்நுட்ப வசதிகளிலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது. ஆமாங்க இந்த காரில் எக்கச்சக்க தொழில்நுட்ப வசதிகளை ஸ்கோடா வழங்க இருக்கின்றது.
ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜர், சாஃப்ட் டச் டேஷ்போர்டு மற்றும் சன் ரூஃப் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.
ஸ்கோடா கோடியாக் பெட்ரோல்
தற்போது விற்பனையில் இருக்கும் கோடியாக் காரில் பெட்ரோல் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியிலும் ஸ்கோடா ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் வசதிக் கொண்ட டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினையே இது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இது, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூவல் க்ளட்ச் வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இத்துடன், சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம்பெற இருக்கின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் புதுப்பிக்கப்பட்ட மாடலைப் போன்று இது இந்தியாவில் களமிறங்க இருப்பதால் பெரியளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதுப்பிக்கப்பட்ட தோற்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் இடத்தை நிவர்த்தி செய்ய இருக்கும் புதிய கார்:
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் வென்டோ மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில்புதிய கார் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்கார் ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். இந்த கார் பற்றிய முக்கிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், ஃபோக்ஸ்வேன் நிறுவனத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இந்த கார் அமைந்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்:
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் டிகுவான் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடலை மிக சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த காரையே விரைவில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் பெயரில் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது. 5 இருக்கை வசதியுடன் இக்கார் அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலே பார்த்த இந்த 5 கார்களே விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. அதாவது, 2021ம் ஆண்டிற்குள் இந்தியர்கள் கை வசம் சேரவிருக்கின்றன.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!