Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?
அமேசான் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை களமிறக்கியுள்ளது. எதற்காக இந்த நடவடிக்கையில் அமேசான் களமிறங்கியுள்ளது என்பதற்கான தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாளுக்கு நாள் காற்றின் மாசு அதிகரித்து வருகின்றது. இது இந்தியா போன்ற பெரும் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகை சுற்றுப்புறச்சூழலுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கின்றது.
இதற்கு தீர்வு காணும் விதமாக நாடு முழுவதும் மின்வாகனங்களைக் களமிறக்கி எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது இந்தியா மட்டுமின்றி பெருவாரியான உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக உள்ளது. ஆகையால், உள் மற்றும் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்திய மற்றும் முந்தைய வாகன கண்காட்சிகளில் அதிகளவு மின்சார வாகனங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து, உலகின் அனைத்து சாலைகளையும் மின்வாகனங்களே ஆளுகைச் செய்கின்ற வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், மின்வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் அரசு மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், தனியார் போக்குவரத்து மற்றும் பொதுசேவையில் இயங்கும் வாகனங்களையும் மின்சார தரத்திற்கு உயர்த்தும்படி அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக உலகில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான், இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்களை களமிறக்கியுள்ளது. இந்த ஆட்டோக்களை அந்நிறுவனம் அதன் டெலிவரி சேவைக்காகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றது.
'பூஜ்ஜியம் மாசு' என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவை மாசற்ற நாடாக மாற்றும் நோக்கில் அமேசான் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை இந்தியா மட்டுமின்றி மற்ற உலகநாடுகளிலும் அமேசான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
அமேசானின் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சாக்கள்குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தவீடியோவில், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ் எலெக்ட்ரிக் ஆட்டோவை இயக்குவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவருடன், சில டெலிவரி பாய்களும் அந்த ஆட்டோவை இயக்குகின்றனர்.
முன்னதாக, மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாக அமேசான் அறிவித்திருந்தது. இதனடிப்படையிலேயே இந்த மின்சார டெலிவரி வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அமேசான் நிறுவனம் தற்போது இந்தியாவில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அமேசான் மற்றும் வால்மார்ட் கட்டுபடுத்துதலின் கீழ் இயங்கி வரும் ஃபிளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களின் வருகை இந்தியாவின் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பெரும் பின்னடைவை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றது.
இவ்விரு நிறுவனங்களும் அதிக சலுகையை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுப்பதால் பெரும் நஷ்டத்தை அடைவதாக சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
எனவே, சாலையோர கடைகளும் லாபம் அடையும் விதமாக அமேசான், அவற்றை அதன் டெலிவரி பாயிண்டாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றது. இதனால், வாடிக்கையாளர்கள் எளிதில் தங்களின் பொருட்களைப் பெறுவதுடன், சிறிய கடைக்காரர்களும் கூடுதலாக வருமானம் ஈட்டமுடியும்.
இதற்காக ஏற்கனவே மும்பையில் பல்வேறு சாலையோர கடைகள் பயன்படுத்தப்பப்பட்டிருப்பதாக பெசோஸ் தெரிவித்தார்.
பில்லியன் டாலர் முதலீட்டில் செய்யப்பட்டு வரும் அமேசானின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு பெரியளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஒரு வேலை இந்த முதலீட்டில் அமேசான் இழப்பீடு சந்திக்க நேரிடுமானால், அதனை இந்தியா ஈடு செய்ய வேண்டும் என்ற காரணத்தால் மத்திய அமைச்சகம் இதற்கு வரவேற்பு அளிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஆங்கில செய்தி தளம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!