Just In
- 38 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?
பிரபல இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ஏழை விவசாயி ஒருவருக்கு ஆச்சரிய பரிசை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
அண்மையில் இணையம் மற்றும் செய்திகள் என அனைத்தையும் ஒற்றை முதியவர் ஆளுகை செய்தார். தனி ஒரு ஆளாக தனது கிராமத்திற்கு தேவையான நீரை 3 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்த செயலின் காரணமாக அந்த முதியவர், அக்கிராமத்தின் ஹீரோவாக மாறினார். கிராமத்திற்கு மட்டுமின்றி இணையத்திலும் அவர் செலிபிரிட்டியாக மாறியிருக்கின்றார்.
எனவே ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை பாராட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, இந்த வயசான விவசாயியிக்கு உதவிக் கரம் நீட்ட தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இவர் விவசாயியிக்கு உதவும் விதமாக டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிராக்டரை பரிசாக வழங்குவதை எனது பாக்கியமாக கருதுகின்றேன்" என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில், #விவசாயி உருவாக்கியிருக்கும் கால்வாய் எஜிப்த் பிரமிடு அல்லது தாஜ் ஆகிய நினைவு சின்னங்களைப் போன்று அதிக மதிப்பு வாய்ந்தது. இதற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக நாங்கள் டிராக்டரை அவருக்கு பரிசாக வழங்க இருக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலம், காயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாயுங்கி புய்யான். கொத்திவாலா எனும் கிராமத்தில் வசித்து வரும் இவர் கால்நடைகளை வளர்ப்பை பிராதன தொழிலாக செய்து வருகின்றார். இவற்றிற்கு தண்ணீர் கொடுக்க அருகிலுள்ள காட்டுப்பகுதியையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.
அது வெகு நீண்ட தூரத்தில் இருக்கின்ற காரணத்தினாலும், அங்கிருக்கும் பெரும்பாலான தண்ணீர் ஆற்றில் கலந்துக் வீணாகுகின்ற காரணத்தினாலும், அந்த நீரை தனது கிராமத்திற்கு கொண்டு வர அந்த முதியவர் திட்டமிட்டார். இதுகுறித்து தனது கிராமத்தினரிடம் பேசியபோது எவரும் உதவ முன்வரவில்லை.
எனவே தனி ஒரு ஆளாக இறங்கி எந்தவொரு எந்திரத்தின் உதவியும் இல்லாமல் கல்வாயை வெட்டத் தொடங்கினார். இதன்படி சுமார் 30 வருடங்களாக அந்த முதியவர் செய்த முயற்சியினால் தற்போது மலையில் இருந்து வெளியேறி வீணாகி வந்த தண்ணீர் தற்போது முதியவரின் கிரமாத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
லாயுங்கி புய்யான் வசிக்கும் கிராமமானது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம் ஆகும். ஆனால், இங்கு நீர் வசதி போதியளவு இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் வேலைத் தேடி வெளி மாநிலம் மற்றும் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.
இம்மாதிரியான சூழ்நிலையிலேயே விடா முயற்சியால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை தனியாளாக நின்று தண்ணீரை தன் கிராமத்திற்கு முதியவர் கொண்டு வந்திருக்கின்றார். முதியவரின் சுயநலமில்லாத இந்த செயலின் காரணமாகவே நாடே அவரை பாராட்டி வருகின்றது.
இந்த நிலையிலேயே மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா முதியவர் புய்யனுக்கு டிராக்டரை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். முதியவரின் முயற்சியால் தற்போது அவர் வசித்து வரும் கிராமத்தின் விவசாயம் மற்றும் கால் நடைகளுக்கு தடையில்லா நீர் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.
முன்னதாக, பேட்டியெடுத்த ஓர் நிரூபரிடம், முதியவர் புய்யன், "தான் ஒரு டிராக்டரைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. ஒரு டிராக்டர் கிடைத்தால், பெரிதும் உதவியாக இருக்கும்" என கூறியிருந்தார். இந்த தகவலை நிரூபர் தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தி ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு உடனடி பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா விவசாயிக்கு டிராக்டரை வழங்க தயாராக உள்ளோம். அவரை தொடர்பு கொள்வது என கேட்டிருந்தார்?, இதனடிப்படையிலேயே விவசாயிக்கு டிராக்டர் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிந்திரா, இதுபோன்று பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!