Just In
- 52 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?
பிரபல இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ஏழை விவசாயி ஒருவருக்கு ஆச்சரிய பரிசை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
அண்மையில் இணையம் மற்றும் செய்திகள் என அனைத்தையும் ஒற்றை முதியவர் ஆளுகை செய்தார். தனி ஒரு ஆளாக தனது கிராமத்திற்கு தேவையான நீரை 3 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்த செயலின் காரணமாக அந்த முதியவர், அக்கிராமத்தின் ஹீரோவாக மாறினார். கிராமத்திற்கு மட்டுமின்றி இணையத்திலும் அவர் செலிபிரிட்டியாக மாறியிருக்கின்றார்.
எனவே ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை பாராட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, இந்த வயசான விவசாயியிக்கு உதவிக் கரம் நீட்ட தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இவர் விவசாயியிக்கு உதவும் விதமாக டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிராக்டரை பரிசாக வழங்குவதை எனது பாக்கியமாக கருதுகின்றேன்" என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில், #விவசாயி உருவாக்கியிருக்கும் கால்வாய் எஜிப்த் பிரமிடு அல்லது தாஜ் ஆகிய நினைவு சின்னங்களைப் போன்று அதிக மதிப்பு வாய்ந்தது. இதற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக நாங்கள் டிராக்டரை அவருக்கு பரிசாக வழங்க இருக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலம், காயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாயுங்கி புய்யான். கொத்திவாலா எனும் கிராமத்தில் வசித்து வரும் இவர் கால்நடைகளை வளர்ப்பை பிராதன தொழிலாக செய்து வருகின்றார். இவற்றிற்கு தண்ணீர் கொடுக்க அருகிலுள்ள காட்டுப்பகுதியையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.
அது வெகு நீண்ட தூரத்தில் இருக்கின்ற காரணத்தினாலும், அங்கிருக்கும் பெரும்பாலான தண்ணீர் ஆற்றில் கலந்துக் வீணாகுகின்ற காரணத்தினாலும், அந்த நீரை தனது கிராமத்திற்கு கொண்டு வர அந்த முதியவர் திட்டமிட்டார். இதுகுறித்து தனது கிராமத்தினரிடம் பேசியபோது எவரும் உதவ முன்வரவில்லை.
எனவே தனி ஒரு ஆளாக இறங்கி எந்தவொரு எந்திரத்தின் உதவியும் இல்லாமல் கல்வாயை வெட்டத் தொடங்கினார். இதன்படி சுமார் 30 வருடங்களாக அந்த முதியவர் செய்த முயற்சியினால் தற்போது மலையில் இருந்து வெளியேறி வீணாகி வந்த தண்ணீர் தற்போது முதியவரின் கிரமாத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
லாயுங்கி புய்யான் வசிக்கும் கிராமமானது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம் ஆகும். ஆனால், இங்கு நீர் வசதி போதியளவு இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் வேலைத் தேடி வெளி மாநிலம் மற்றும் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.
இம்மாதிரியான சூழ்நிலையிலேயே விடா முயற்சியால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை தனியாளாக நின்று தண்ணீரை தன் கிராமத்திற்கு முதியவர் கொண்டு வந்திருக்கின்றார். முதியவரின் சுயநலமில்லாத இந்த செயலின் காரணமாகவே நாடே அவரை பாராட்டி வருகின்றது.
இந்த நிலையிலேயே மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா முதியவர் புய்யனுக்கு டிராக்டரை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். முதியவரின் முயற்சியால் தற்போது அவர் வசித்து வரும் கிராமத்தின் விவசாயம் மற்றும் கால் நடைகளுக்கு தடையில்லா நீர் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.
முன்னதாக, பேட்டியெடுத்த ஓர் நிரூபரிடம், முதியவர் புய்யன், "தான் ஒரு டிராக்டரைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. ஒரு டிராக்டர் கிடைத்தால், பெரிதும் உதவியாக இருக்கும்" என கூறியிருந்தார். இந்த தகவலை நிரூபர் தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தி ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு உடனடி பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா விவசாயிக்கு டிராக்டரை வழங்க தயாராக உள்ளோம். அவரை தொடர்பு கொள்வது என கேட்டிருந்தார்?, இதனடிப்படையிலேயே விவசாயிக்கு டிராக்டர் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிந்திரா, இதுபோன்று பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!