Just In
- 38 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 2 hrs ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- Sports
கடைசி நிமிடம்.. அந்த கோல்.. கேரளாவுக்கு ஷாக் கொடுத்த ஈஸ்ட் பெங்கால்!
- News
தடுப்பூசி பாதுகாப்பானது.. நானும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வேன்.. முதல்வர்
- Finance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டீசலுக்கு குட்பை... திருப்பதியில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம்... பக்தர்கள் மகிழ்ச்சி...
திருப்பதி திருமலையில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன் பலனாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்து வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம், திருப்பதி திருமலையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கவுள்ளது.

வெங்கடாஜலபதியை தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. திருமலை புனித தலம் என்பதால், அதனை கார்பன் உமிழ்வு அறவே இல்லாத பகுதியாக வைத்திருக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரும்புகிறது. எனவே டீசல் பேருந்துகளுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாரிய தலைவர் சுப்பா ரெட்டி இந்த தகவலை கூறியுள்ளார். புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அவர் நேர்மறையாக பதில் அளித்துள்ளார்.

எனவே ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில், முதலில் 100 முதல் 150 எலெக்ட்ரிக் பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டீசல் பேருந்துகளால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்கப்பட்டு, காற்றின் தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இங்கு மட்டுமல்லாது, நாடு முழுக்க புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 26 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை பெஸ்ட் நிறுவனம் சமீபத்தில் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது மும்பையில் பேருந்து சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.

இதேபோல் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டெல்லி போக்குவரத்து கழகமும், சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 தாழ் தள ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.
Note: Images used are for representational purpose only.