Just In
- 9 min ago
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 10 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
Don't Miss!
- News
செங்கோட்டை வன்முறை.. பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை
- Movies
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொகுசு கார்களின் விற்பனை தள்ளாடும் நிலையில் ஆடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?
சொகுசு கார்களின் விற்பனை தள்ளாடி வரும் நிலையில், ஆடி நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய கார் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அதன்பின் வந்த மாதங்களில் கார்களின் விற்பனை ஓரளவு உயர்ந்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில், அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இந்தியாவில் புதிய கார்களின் விற்பனை வெகு சிறப்பாக அமைந்துள்ளது.

இதற்கு பண்டிகை காலம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் அச்சமும் கார்களின் விற்பனை உயர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தினால், கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனவே அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அதே சமயம் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு சிறிய கார்களை பலர் வாங்கி வருகின்றனர். எனவே சொகுசு கார்களின் விற்பனை இன்னும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை.

மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது சொகுசு கார் நிறுவனங்கள் தள்ளாடி கொண்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக ஆடி சொகுசு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, இந்திய சந்தையில் ஏராளமான ரசிகர்களையும், வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் ஆடி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், கார்களின் விலையை உயர்த்தும் முடிவை ஆடி நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''ஆடி இந்தியா மாடல்களின் எக்ஸ் ஷோரூம் விலை, வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2 சதவீதம் வரை உயரும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவரான பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், ''எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளும், கரன்ஸி ஏற்ற, இறக்கங்களும் எங்கள் செலவு கட்டமைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே விலைகளை திருத்தியமைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்'' என்றார். இந்தியாவில் ஏற்கனவே சொகுசு கார்களின் விற்பனை மோசமான நிலையில் இருந்து வரும் சூழலில், ஆடி இந்தியா நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனை மேலும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.