Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5 வருடங்கள் காத்திருந்தே ஆக வேண்டும்.. பென்ட்லீ தகவலால் அதிருப்தி.. இதுதான் உங்க டக்கா ஜி...!
பென்ட்லீ நிறுவனம் அதன் ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியதைப் போன்று ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகின் அதிக விலையுயர்ந்த சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான பென்ட்லீ, அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் அண்மைக் காலங்களாக சொகுசு வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட ஆரம்பதித்துள்ளன. குறிப்பாக பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் புதிய விற்பனை விகிதத்தைப் பெற தொடங்கியுள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லீ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதேமாதிரியான சூழலே காணப்படுகின்றது.
அந்தவகையில், பென்ட்லீ நிறுவனத்தின் அதிவேக மற்றும் சொகுசு கார்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு கிடைப்பதைப் போன்றே தனித்துவமான வரவேற்பு சொகுசு கார்கள் சந்தையில் நிலவி வருகின்றது.
தொடர்ந்து, பென்ட்லீயின் புதிய வரவுகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், இதன் புதிய தயாரிப்புகளுக்கு அதன் ரசிகர்கள் எப்போதுமே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பை அளிக்கின்றனர். அவ்வாறு, தற்போது பென்ட்லீ நிறுவனத்தின் மின்சார தயாரிப்புகள்மீது தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர் அந்நிறுவனத்தின் ரசிகர்கள்.
ஆனால், இந்த எதிர்பார்ப்பினை வெடிகுண்டு வைத்து தகர்க்கின்ற வகையில் பென்ட்லீ நிறுவனம் தற்போது ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், அதன் ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாகனச் சந்தையின் தேவையை அறிந்த பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதிய எதிர்கால மின்வாகனங்களைப் பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன.
மேலும், அவை விரைவில் அதாவது வருகின்ற 2022ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வருகின்ற வகையில் தயாரிப்பு பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால், பென்ட்லீ நிறுவனமோ அதன் முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வருகின்ற 2025ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஆகையால், இதன் தயாரிப்புகள் சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து ஐந்தாண்டின் தொடக்கத்திலேயே பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க எண்ணி பென்ட்லீ நிறுவனம் மின்வாகனத்தை தயாரிக்க இருப்பது வரவேற்கதக்கதாக இருக்கின்றது. இருப்பினும், அது மிகவும் காலம் தாழ்த்தி அறிமுகம் செய்ய இருப்பது சற்றே வருத்தத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
இருப்பினும், பென்ட்லீயின் இந்த முயற்சிக்கு பெரும்பாலானோர் ஆதரவு அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், சந்தையில் உள்ள மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் மின்வாகனத்தை அறிமுகம் செய்வதில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆகையால், பென்ட்லீயின் முதல் மின்வாகனம் காலம் தாழ்த்தி அறிமுகமாகும்பட்சத்தில் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
அதேசமயம், 2025ம் ஆண்டிற்குள் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அதிகவேக சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சியை காணவிருக்கின்றது.
இதை முன்னிட்டே, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரவேண்டும் என இந்த கால தாமத்தை பென்ட்லீ செய்வதாக கருதப்படுகின்றது.
பென்ட்லீ அதன் முதல் எலெக்ட்ரிக் காரை முஸ்லேன் மாடலில் அறிமுகம் செய்ய இருப்பதாக இடி கூறியுள்ளது. இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருள் மாடலைக் காட்டிலும் அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
தொடர்ந்து, மற்ற மின்வாகனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கின்ற வகையில் அதிக ரேஞ்ச், இலகுவான எடை, அதிக சொகுசு வசதி என அனைத்திலும் இந்த கார் சிறந்து விளங்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதுதவிர இந்த புதிய எலெக்ட்ரிக் கார்குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான தேவை நாளுக்கு நாளுக்கு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. இது, இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்.
அதிலும், இந்தியா போன்ற மிகப்பெரிய வாகனச் சந்தையைக் கொண்ட நாடுகளுக்கு இது முக்கிய தேவையாக மாறியுள்ளது. ஆகையால், பல நாடுகள் மின் வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டுவருவதற்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், "இதுதான உங்க டக்கு..." என்று கூறுவதைப் போன்று பென்ட்லீ நிறுவனம் அதன் மின்வாகனம்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!