மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், பெஸ்ட் நிறுவனம் புதிய மின்சார பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

மும்பையில் பேருந்துகளை இயக்கி வரும் பெஸ்ட் (BEST - Brihanmumbai Electric Supply and Transport) நிறுவனம், மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், 26 புதிய மின்சார பேருந்துகளை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். ஃபேம் இந்தியா திட்டத்தின் 2வது கட்டத்தின் கீழ் (Phase II) மொத்தம் 300 புதிய மின்சார பேருந்துகளை பெஸ்ட் பெறவுள்ளது.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

இதில், முதல் கட்டமாக தற்போது 26 மின்சார பேருந்துகளை பெற்றுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''26 புதிய மின்சார பேருந்துகளை பெஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் அவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து இந்த புதிய மின்சார பேருந்துகள் அனைத்தும் கூடிய விரைவில் பொதுமக்களின் சேவைக்கு கொண்டு வரப்படும்'' என்றனர்.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

பெஸ்ட் நிறுவனத்திடம் மொத்தம் 3,875 பேருந்துகள் உள்ளன. இதில், மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை 38. இது கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கையாகும். பெஸ்ட் நிறுவனத்திடம் உள்ள 38 மின்சார பேருந்துகளில், முதல் 6 பேருந்துகள் கடந்த 2017ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டன. எஞ்சிய 32 பேருந்துகள் ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் (Phase 1) கீழ், குத்தகைக்கு எடுக்கப்பட்டன.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

இந்த சூழலில் தற்போது வந்துள்ள புதிய மின்சார பேருந்துகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''புதிய மின்சார பேருந்துகளில் அனைத்து அதிநவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும். அத்துடன் வழக்கமான பேருந்துகளை போல இவை அதிக சப்தம் எழுப்பாது. மேலும் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களையும் உமிழாது'' என்றனர்.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைப்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதும் மத்திய அரசின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும், மின்சார வாகனங்கள் மூலம் முடிவு கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...

இதன் விளைவாக இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆதரவு காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்களும், பல்வேறு மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
BEST Gets 26 New Electric Buses - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X