Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மருத்துவர்களை கவுரவப்படுத்த பிஎம்டபிள்யூ வழங்கும் ஸ்பெஷல் திட்டம்!
கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போற்றும் விதத்தில் சிறப்பு சர்வீஸ் திட்டம் ஒன்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான போரில் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரயைும் பொருட்படுத்தாமல் களம் கண்டுள்ளனர். தூக்கத்தையும், குடும்பத்தையும் நினைக்காமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவர்களின் பங்கு மகத்தானதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சிறப்பு சர்வீஸ் திட்டத்தை பரிசாக வழங்குவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ , மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளை வைத்திருக்கும் மருத்துவர்களுக்கு இது பொருந்தும்.
இந்த திட்டத்தின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் பிஎம்டபிள்யூ கார், பைக் உரிமையாளர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இலவச எஞ்சின் ஆயில் மாற்றித் தருவதுடன், பரிசோதனையையும் செய்து தருவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
லாக் டவுன் முடிந்து 90 நாட்களுக்குள் இந்த சிறப்பு திட்டத்தை மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கார்களில் கிருமி நாசினியுடன் சுத்தம் செய்து தரும் பணிகளும் செய்து தரப்படுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா கூறுகையில்," இந்த மாத துவக்கத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சென்னை மற்றும் டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மருத்துவத் துறை தேவைக்காகவும், பாதிக்கப்பட்டோருக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிஎம்டபிள்யூ சார்பில் செய்து வருகிறோம்.
மக்களின் உடல்நலன் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக மருத்துவர்கள் இரவு பகல் தினசரி பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு அன்பளிப்பாக எஞ்சின் ஆயில் சர்வீஸ் திட்டத்தை எங்களது டீலர்கள் மூலமாக வழங்க உள்ளோம்.
எதிர்பாராத இந்த இக்கட்டான தருணத்தில், மருத்துவர்களின் வாகனங்களை அன்பளிப்பு திட்டத்தின் வாயிலாக பராமரித்து தருவதில் எமது நிறுவனமும், டீலர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.