Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Movies நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதெல்லாம் சரியாகும்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை களமிறக்குவோம்... பிஎம்டபிள்யூ அதிகாரி பேட்டி!
எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்த அந்நிறுவனத்தின் அதிகாரி திடமான பதில் ஒன்றை அளித்துள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மெல்ல வளரத் துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து அனைத்து வாகன நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை துவங்கி இருக்கின்றன. சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அண்மையில் தனது இ.க்யூ.சி என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ, எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் கொண்டு வருவது குறித்த நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
இதுகுறித்துஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை செயல் அதிகாரி விக்ரம் பவா,"எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் சரியான கட்டமைப்பு வரும் வரை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை ஒத்தி வைக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரை சார்ஜ் பிரச்னை இல்லாமல் வாடிக்கையாளர்கள் பயணிக்கும் நிலை வரும்போது நிச்சயம் எங்களது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் பிஎம்டபிள்யூ ஐ3, பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 மற்றும் மினி எலெக்ட்ரிக் என மூன்று கார் மாடல்கள் கைவசம் உள்ளன. ஆனாால், அவற்றை இங்கு கொண்டு வந்தால், அதற்கான சந்தை வாய்ப்பு போதிய அளவு இருக்காது என்று பிஎம்டபிள்யூ கருதுகிறது.
மேலும், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் அச்சமின்றி வாங்க முற்படுவர். எனவே, இப்போதை நிலையில் வர்த்தக ரீதியில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதில் நடைமுறை மற்றும் வர்த்தக ரீதியில் சிக்கல்கள் உள்ளதாக பிஎம்டபிள்யூ கருதுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற சிறப்பு மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தவிரவும், இதே ஃபேம் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளில் 25 கிமீ தூரத்திற்கு ஒரு எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்