Just In
- 31 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவனிக்கவும்... எரிபொருள் நிரப்பும்போது தானாக தீ பிடித்த கார்.. எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!
எரிபொருள் நிரப்பும்போது காரில் திடீரென தீ பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஓட்டுநர் எதுவும் செய்யாமல் எப்படி திடீரென தீ விபத்து சம்பவம் அரங்கேறியது என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுவிடுவதில்லை. நம்முடைய அஜாக்கிரதையினாலே ஒரு சில நேரங்களில் பெட்ரோல் பங்குகளில் தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
குறிப்பாக, எரிபொருள் நிரப்பும்போது செல்போனில் பேசுவது மற்றும் தீயை ஏற்படுத்தும் விதமான பொருட்களை உபயோகப்படுத்துவது இதுபோன்ற செயல்களினால் மட்டுமே எதிர்பாராத விபரீதங்கள் ஏற்படுகின்றன.
இதனாலயே, தீ விபத்தை விளைவிக்கின்ற வகையிலான உபகரணங்களை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் அலட்சியப்போக்காக தடைச் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி விபத்தில் சிக்குகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் டூ வீலரில் வரும்போது மட்டுமே நடக்கும் என எண்ணி விடாதீர்கள்.
சில நேரங்களில் கார்களிலும் ஏற்படும். இதை உறுதிப்படுத்துகின்ற வகையிலான தீ விபத்து சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோதான் வாகனதுறையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது.
பொதுவாக, கார்களுக்கு எரிபொருள் நிரப்புவதை உரிமையாளர் சாதாரணமான ஓர் செயலாகவே கருதுகின்றனர். ஆனால், இதிலும் அதிக கவனம் தேவை, இல்லாவிட்டால் பேராபத்தை சந்திக்க நேரிடும் என்பதை மிக உறுதியாக தெரியப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காரின் உரிமையாளர் செல்போன் போன்ற எந்தவொரு பொருளையும் பயன்படுத்தாமலே தீ விபத்து ஏற்படுவதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், பலரிடையே இதில் எவ்வாறு தீ பிடித்தது என்ற கேள்வியெழலாம். வாருங்கள் அது குறித்த தகவலைதான் இந்த பதவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.s
நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது அல்ல. ஆனால், இது உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் நிகழலாம்.
வீடியோவில், பிக் அப் டிரக்கின் உரிமையாளர், அதற்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வருகின்றார். அப்போது, பணியாளர் ஒருவர் வந்து காருக்கு தேவையான எரிபொருளை நிரப்புகின்றார். தொடர்ந்து, காரின் கதவை திறந்தவாறு ஓட்டுநர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். இந்த சூழ்நிலை சில நொடிகள் மட்டுமே மிக சாதாரணமதாக செல்கின்றது.
பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் எரிபொருள் நிரப்பும் பகுதியில் தீடிரென தீ ஏற்பட்டு காரின் உள் மற்றும் பக்கவாட்டு பகுதியில் பரவியது. இதனால், அதிர்ச்சியுற்ற பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரப்பும் பம்பை வெளியே தூக்கியெறிந்துவிட்டு ஓடிவிடுகின்றார். பின்னர், தீ முழுவதுமாக பரவுவதற்குள்ளாக தீயணைப்பான்களைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின்போது காரின் கதவு திறந்திருந்த காரணத்தால் காருக்குள்ளும் தீ பரவியது. இதனால், காருக்குள் அமர்ந்திருந்த ஓட்டுநர் மறுபக்க கதவை திறந்து வெளியேறுவிடுகின்றார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான தீ காயமும் ஏற்படவில்லை. இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. தற்போது, அந்த காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திடீரென தீ எப்படி உருவாகியது?
மேற்கண்ட வீடியோவில் தீ எப்படி உருவாகியது என்பதற்கான தடையம் சிறு துளியளவும் தெரியவில்லை. ஆகையால், இந்த காரில் எப்படி தீ பற்றியது என்ற கேள்வி எழும்பிய வண்ணம் இருக்கின்றது. ஆகையால், அறிவியல் சார்ந்த விஷயமே முக்கிய காரணி என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, கார் சமநிலையற்ற இடத்தில் நின்றதும் ஓர் காரணமாக கூறப்படுகின்றது.
பெட்ரோல் பம்பிற்கும், காரில் பெட்ரோல் நிரப்பும் வாய் பகுதிக்கும் ஏற்பட்ட உராய்வினால் கண்களுக்கு புலப்படாத தீ பொறி உருவாகி, இந்த தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
இதனை மையமாக வைத்து இதற்கு முன்பாக பல்வேறு தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதுகுறித்த வீடியோக்கள் பலவற்றை நம்மால் இணையத்தில் இப்போதும் காண முடியும்.
குறிப்பாக, காரின் உடலில் எப்போதும் சிறியளவிலான மின்சார ஓட்டம் பாய்ந்தவாறு இருக்கம். இது, காருக்கான சாவி ஆன் செய்தவாறு இருக்கும்போது நடக்கும் ஓர் நிகழ்வாகும். அவ்வாறு, காரின் சாவி ஆன் செய்தவாறு இருக்கும் போது ஏற்படும் மின் காந்தம், வேறேதேனும் உலோக பொருள் உராயும்போது சிறியளவு நெருப்பு பொறியை ஏற்படுத்தும்.
இதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தில் ஓட்டுநரின் உடல் பூமியில் இருந்து எர்த் மின்னாற்றலை தன் உடல் வழியாக கடத்தி காரில் சேர்த்துள்ளார். இந்த வினையாலே, பெட்ரோல் பங்கிள் எரிபொருள் நிரப்பும்போது தீ ஏற்பட்டதற்கான காரணங்கள்.
இதை தவிர்க்க என்ன வழி?
இதனாலயே பெரும்பாலான வாகன ஓட்டிகள் காரில் எரிபொருளை நிரப்பும்போது தங்களினால் பூமிக்கும், காருக்கும் ஏற்படும் தொடர்பை துண்டிக்கும் வகையில் தள்ளிசென்று நின்று விடுகின்றனர். மேலும், காரில் இருக்கும் சாவி ஆஃப் செய்து விட்டு கழட்டி விடுகின்றனர்.
இதுவே, திடீர் தீ விபத்தை தவிர்க்கும் ஒரே வழி. தொடர்ந்து, பெட்ரோலை காரில் நிரப்பிக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு போதும் காருக்குள் நுழை முயற்சிக்க வேண்டாம்.