Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்! வாகனத்தை இப்படி அலங்கோலம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?
இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் வாகனம் சார்ந்து புதிய கலாச்சாரம் ஒன்று முளைக்கத் தொடங்கியுள்ளது. அது என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மோட்டார் வாகன விதிகளின்படி வாகன மாடிஃபிகேஷன் சட்ட விரேத செயலாக இருந்தாலும் இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த செயலுக்கு நல்ல ஈர்ப்பு நிலவி வருகின்றது. இதேபோன்று தற்போது மற்றுமொரு வாகனம் சார்ந்த விநோத செயலுக்கு இந்திய வாகன ஆர்வலர்கள் வித்திட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, வாகனத்தின் பின் பகுதி பம்பரை நீக்கிவிட்டு இயக்கும் செயலை பலர் தங்களின் வாகனங்களில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனத்திற்கு அழகு சேர்ப்பதில் முன் மற்றும் பின் பக்க பம்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்தகைய அம்சத்தை இந்தியர்கள் சிலர் குறிப்பிட்ட காரணங்களுக்காக நீக்கி வருகின்றனர்.
முன்னதாக இந்த கலாச்சாரம் உலக நாடுகளில், சில கார் பந்தய வீரர்கள் மத்தியில் மட்டுமே காணப்பட்டது. குறிப்பாக, ரேஸ் டிராக்குகள் வாகனத்தை இயக்கும்போது மட்டுமே இதை அவர்கள் கடைபிடித்து வந்ததனர். அதிலும், லம்போர்கினி கார் உரிமையாளர்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் பலர் இச்செயலைச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவிலும்கூட இதனை சில வாகன உரிமையாளர்கள் தங்களின் கார்களில் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த செயலுக்கு அவர்கள் கூறும் காரணம்; காரின் வெளியேற்றும் அமைப்பை (எக்சாஸ்ட் சிஸ்டம் - exhaust system) வெட்ட வெளிச்சமாக காண்பிப்பது மட்டுமே நோக்கமாகும். தொடர்ந்து, ஒரு சிலர் வெளியேற்றும் அமைப்பை விரைவில் குளிர்விக்கும் நோக்கிலும் இவ்வாறு பின் பகுதி பம்பரை நீக்குவதற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர்.
எதுவாக இருந்தாலும் இந்த பம்பரை நீக்கும் செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் சூழ்நிலையேக் காணப்படுகின்றது. ஒரு சிலர், அர்னால்டின் பிரபல ஹாலிவுட் திரைப்படமான பிரிடேட்டர்ஸ் எனும் படத்தில் வரும் வேற்றுக் கிரக வாசியைப் போல் பம்பர் நீக்கப்படும் கார்கள் காட்சியளிப்பதாக நக்கலடிக்கின்றனர்.
சரி இப்போ பின் பக்க பம்பரை தூக்கிட்டீங்க! அடுத்து என்ன முன் பக்க பம்பரா?, என்ற நக்கலான கேள்வியையும் நெட்டிசன்கள் முன் வைக்கின்றனர். பொதுவாக இந்த செயலை 4X4 திறனுடைய வாகனங்களை, ஆஃப்-ரோடு பயணத்தில் ஈடுபடுத்தும்போது வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸை அதிகரிக்கச் செய்யும் விதமாக வாகன ஆர்வலர்கள் செய்து வந்தனர்.
வாகன ஆர்வலர்களின் இந்த செயலுக்கு "பின்புற பம்பரை நீக்கு" (rear bumper delete) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி கார்களைத் தொடர்ந்து சில 90ஸ் ஹோண்டா சிவிக் கார் உரிமையாளர்களும் இதே பம்பரை நீக்கும் செயலைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, டிராக் ரேஸின்போது இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
இந்த செயல் மிகவும் ஆபத்தானது என வாகனம் சார்ந்து இயங்கும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வாகனத்தின் பின் பகுதி பம்பரை முழுமையாக நீக்கிவிட்டு இயக்குவதால், பின்பகுதி கவசம் இன்றி பாதுகாப்பில்லாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றது. இம்மாதிரியான நேரத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள் அதிக வேகத்தில் மோதுமானால் அது எதிர்பார்த்திராத பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மேலும், சிறு தவறும்கூட எஞ்ஜின் மற்றும் அதன் வேலையை சேதப்படுத்தக்கூடும். இந்த நிலை குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு மட்டுமின்றி பிற வாகனங்கள் மற்றும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவேதான் வாகன ஆர்வலர்களின் இந்த விநோதமான செயலை முட்டாள்தனமானது என மிக வெளிப்படையாக பலர் தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். டீம் பிஎச்பி தளத்தில்கூட ஓர் பயனர் தன்னுடைய கருத்தை இவ்வாறே முன் வைத்துள்ளார்.
இந்த செயல், உயர் ரக வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி சில வெகுஜன கார் உரிமையாளர்களையும் கவர்ந்து வருகின்றது. மாருதி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட கார்களிலும் பம்பர் நீக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. உயர் ரக வாகனங்களில் எக்சாஸ்ட் சிஸ்டம் பின் பகுதியில் இருக்கின்றது. அவற்றை குளிர்விக்க அதன் உரிமையாளர்கள் பின் பக்க பம்பரை நீக்குகின்றனர்.
ஆனால், வெகுஜன பயன்பாட்டில் இருக்கும் பலேனோ, போலோ, ஸ்விஃப்ட், இன்னோவா கார்களில் ஏன் இந்த மாற்றம் செய்யப்படுகின்றது என்பது புரியவில்லை என வாகன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஆபத்தான செயல் என்பதால் விரைவில் இத்துறைச் சார்ந்த அதிகாரிகள் இதற்கு எதிராகவும் தங்களின் இரும்புக் கரங்களை ஓங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைக் காலங்களாக வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக போக்குவரத்து போலீஸார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பின் பக்க பம்பரை நீக்கும் செயலும் ஓர் விதமான வாகன மாடிஃபிகேஷன் செயல் என்பதால் இவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!