Just In
- 15 min ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 3 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 4 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 6 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
Don't Miss!
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
5 நிமிடத்தில் துடி துடித்து சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை அழிக்க பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் புது வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பல ஏராளாமான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இதில், மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்பும் அடங்கும். வைரஸ் எளிதாக பரவும் தன்மையைக் கொண்டிருப்பதன் காரணத்தால் உலக நாடுகள் பல தற்போது ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த வண்ணம் இருக்கின்றன.
இதனால், பொருளாதாரம் மேலும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை இன்னும் சில காலங்களுக்கு தொடர்ச்சியாக நீடித்தால் வரும் காலத்தில் மிகப்பெரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, வைரசை அழிப்பது தலையாய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.
MOST RAED: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
ஆகையால், உலக நாடுகள் அனைத்தும் வைரசை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.
இந்நிலையில், வைரசை அழிப்பது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஜார்ஜியா பல்கலைக் கழக மாணவர்கள், கொரோனாவை ஒழிப்பதற்கான புதிய வழி ஒன்றைக் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் ஆய்வின்படி, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரில் ஏற்படும் பசுமை வீடு விளைவின் காரணமாக, காரின் மேற்பரப்பு மற்றும் உட்பரப்பில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் விரைவில் அழிந்துபோவது உறுதியாகியுள்ளது.
அதாவது, சூரியக் கதிர்களால் உருவாகும் அதிக வெப்பநிலை மற்றும் ஷார்ட்வேவ் கதிர்வீச்சுகள் ஆகியவை காரின் மூலை முடுக்குகளில் மறைந்திருக்கும் வைரசை அடியோடு ஒழித்துக்கட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு வாகன உரிமையாளர்களை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. ஆனால், இந்த கண்டுபிடிப்பு மனித உடலில் தங்கியிருக்கும் வைரஸ்களை அழிக்கப் பயன்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இருப்பினும், இது மனிதர்களின் முதல்நிலை வெற்றி கண்டுபிடிப்பாகவே பார்க்கப்படுகின்றது. முன்னதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது ஆராய்ச்சி மாணவர்களால் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
வைரஸ் எப்போது, எப்படி பரவும் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருந்து வருகின்றது. இம்மாதிரியான சூழலில், வாகன ஓட்டிகள் பலர் தங்களின் வாகனங்களை பல நூறுகளைச் செலவு செய்து சானிட்டைசிங் (கிருமி நாசினி) செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காரை நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தினாலே போதும் வைரஸ்கள் தானாகவே அழிந்துவிடும் என்று ஜார்ஜியா பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ஓர் கார் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதால் வெளிப்புறத்தில் தோன்றும் வெப்பநிலையைக் காட்டிலும் பல மடங்கு வெப்பநிலை கேபினுக்குள் உருவாகும். அதாவது, தோரயமாக வெளிப்புறத்தில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்றால், காரின் உட்புறத்தில் அது 45 டிகிரி வரை உயர்ந்திருக்கும்.
தற்போது, கத்தரி வெயில் பூமியை சுட்டெரித்து வருவதால் வெளிப்புறத்தில் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றது. இது கார்களில் 55 டிகிரி வரை வெப்பநிலையை உயர்த்தி விடுகின்றது. இந்த உச்சபட்ச வெப்பநிலை சார்ஸ், பாக்டீரியா, சிஓவி-2 உள்ளிட்ட நுண்ணியிர் வைரஸ்களை அழிக்கும் வகையில் உள்ளது. கோவிட்-19 வைரசுக்கும் இதுதான் வில்லன்.
ஆம், மனித உடலில் பல நாட்கள் வாழும் இந்த கொரோனா வைரஸ் வெளிப்புறத்தில் (மனித உடல் அல்லாத பொருள்) வாழும்போது குறைந்த ஆயுட்காலத்தையேக் கொண்டிருக்கின்றது. அதாவது முந்தை ஆய்வுகளின்படி, காகிதம் மற்றும் அட்டைகளில் சுமார் ஒரு நாளும், பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரையும் இந்த வைரசால் வாழு முடியும் என தெரியவந்தது.
ஆனால், தற்போது நிலவும் உச்சபட்ச வெப்பநிலையில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதனால் உறுவாகும் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெறும் 20 நிமிடங்களில் வைரசைக் கொன்று குவித்துவிடும். வைரஸ் எந்த பகுதியில் மறைந்திருந்தாலும் இந்த வினை செயல்படும்.
99.99 சதவீதம் நிச்சயம் வரைசை இந்த செயல் அழித்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர். இதுவே, வெப்பநிலை 74 டிகிரியில் இருந்தால் வைரஸ்கள் 5 நிமிடங்களைக் கூட தாண்டது என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
இதுகுறித்து, ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் பேராசிரியர் டிராவிஸ் க்ளென் கூறியதாவது, "மேலும் ஆராய்ச்சிகள் பல தேவைப்படுகின்றது. வைரஸ் இறப்பதற்கு குறைந்த நேரம் எடுக்கும் என்பதை தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும் முக கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த நாங்கள் ஊக்குகின்றோம். முக்கியமாக வெளிப்புறத்தில் செல்லும்போது இரு முகக் கவசங்களைப் பயன்படுத்தலாம். ஒன்றை காருக்குள்ளும், மற்றொன்றை வெளியில் செல்லும்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என அறிவுரை கூறினார். தொடர்ந்து, வாகனங்களை அதிக வெயிலில் பார்க் செய்யவும் அறிவுறுத்தினார்.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!