Just In
- 3 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 5 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 10 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 12 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- Movies தக் லைஃப் பட ஷூட்டிங்.. சிம்புவை பார்த்து ஆடிப்போன மணிரத்னம்.. அப்படி என்ன நடந்தது?
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கம் இப்போ வாங்கலாமா..?
- News இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்.. எகிறும் டென்ஷன்
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் சூப்பர் நியூஸ்
மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பெருநகரங்களில் பெரிய அளவில் காசு மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்களின் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை தவிர்ப்பதற்கு தீர்வு காணும் வகையில் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஃபேம் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த திட்டம் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்டமாக செயல்பாட்டில் உள்ளது. தற்போது ஃபேம்-2 திட்டம் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை இந்த திட்டத்தின் கீழ் விதிகளின்படி, தகுதியுடைய இருசக்கர, மூன்றுசக்கர, நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம் பெற முடியும். அதேநேரத்தில், பஸ் உள்ளிட்ட கனரக மின்சார வாகனங்களுக்கு மானியம் குறித்த விளக்கம் இல்லை.
கனரக மின்சார வாகனங்களை வாங்குவோர் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஃபேம்-2 திட்டத்திற்கு ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் இருசக்கர மின்சார வாகனங்களையும், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்களையும், 55,000 கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களையும், 7,000 எலெக்ட்ரிக் பஸ்களையும் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபேம்- 2 திட்டத்தின் கீழ் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கே மானியம் பெற அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ரேஞ்ச் மற்றும் திறன் அடிப்படையிலும் இந்த மானியத் திட்டத்தில் பல விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.