Just In
- 4 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 10 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 11 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 11 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Technology இனி நோக்கியா போன் எதுக்கு? 50MP செல்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance நெருங்கிய தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா? இன்றைய ரேட் என்ன?
- News மதுரை தொகுதி: 'மாமதுரை' மண்ணில் மீண்டும் செங்கொடி பறக்கும்? இரட்டை இலை இனி ஒருமுறை துளிர்க்கும்?
- Movies அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல..மணமக்களை வாழ்த்துக்கள் ஷங்கர் பேச்சு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை
வரும் மார்ச் மாதத்திற்குள் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் 199 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதன்மூலமாக, 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகளுக்கு போதிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் நம் நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 25 சதவீதம் அளவு குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நெடுஞ்சாலைகளில் மனித மற்றும் விலங்குகள் உயிரிழப்புகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறுகையில், கடந்த ஆண்டுகளாகவே சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பது சவாலானதாகவே இருந்து வருகிறது.
எனினும், நாடுமுழுவதும் விபத்து அதிகம் நடக்கும் அல்லது அதிக ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சாங்களும் தேவைப்படுகின்றன.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்களும், 1.50 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த எண்ணிக்கையை வரும் மார்ச் 31க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் உள்ள 5,000 இடங்களிலும் அதிக முன்னுரிமை அடிப்படையில், அந்த இடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறுகிய காலம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் அந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடமுறைகளும் ஆராயப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!