Just In
- 34 min ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
- 1 hr ago ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- 1 hr ago சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- 5 hrs ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
Don't Miss!
- News நெருங்கும் தேர்தல்.. திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து அதிரடி மாற்றம்.. வைரமுத்து நியமனம்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை
வரும் மார்ச் மாதத்திற்குள் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் 199 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதன்மூலமாக, 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகளுக்கு போதிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் நம் நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 25 சதவீதம் அளவு குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நெடுஞ்சாலைகளில் மனித மற்றும் விலங்குகள் உயிரிழப்புகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறுகையில், கடந்த ஆண்டுகளாகவே சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பது சவாலானதாகவே இருந்து வருகிறது.
எனினும், நாடுமுழுவதும் விபத்து அதிகம் நடக்கும் அல்லது அதிக ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சாங்களும் தேவைப்படுகின்றன.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்களும், 1.50 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த எண்ணிக்கையை வரும் மார்ச் 31க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் உள்ள 5,000 இடங்களிலும் அதிக முன்னுரிமை அடிப்படையில், அந்த இடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறுகிய காலம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் அந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடமுறைகளும் ஆராயப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இப்படி ஒரு அப்பா கிடைப்பது வரம்! மகன் ஆசையை நிறைவேற்ற ரூ92 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை
-
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
-
அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!