Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமல் பதிவு செய்யலாம்... மத்திய அரசு அனுமதி!
மின்சார வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலேயே விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பெரு நகரங்களில் வாகனப் புகையால் மக்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை மனதில் வைத்து, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை விட பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரியின் விலை மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமல் விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அனுமதிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்யும்போது பேட்டரி இருப்பது அவசியமில்லை. அதன் வகை குறித்த விபரங்களையும் குறிப்பிடப்பட வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரத்தில், பரிசோதனை முகமையிடம் சோதனைகளுக்காக ஒப்படைக்கப்படும் புரோட்டோடைப் மின்சார வாகனங்களில் வழக்கமான அல்லது மாற்றிக் கொள்ளும் வகையை சேர்ந்த பேட்டரி இருப்பது அவசியம்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் மின்சார வாகனத்தை பதிவுசெய்யும்போது பேட்டரியை வகை உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடப்படுவது அவசியமில்லை. எனினும், வாகனத்தின் உடல்கூடு வகை, சாலையில் பயன்படுத்துவதற்கான தகுதிச் சான்று உள்ளிட்டவற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், பதிவு செய்ததற்கு பின்னால் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய மின்சார வாகனத்திற்கான தகுந்த பேட்டரியை வாகனத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தனியாக வாங்கிக் கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு மூலமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.