Just In
- 5 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
Don't Miss!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலிஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் முதல் கார் மாடல் அறிமுகம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிஎஸ்ஏ குழுமம்!
இந்தியாவில் முதல் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த முக்கிய அறிவிப்பை பிஎஸ்ஏ குழுமம் வெளியிட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது சிட்ரோன் கார் பிராண்டுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்தது. சிகே பிர்லா குழுமத்துடன் இந்திய வர்த்தகத்தை நிலைநாட்ட முடிவு செய்தது. கடந்த ஆண்டு சிட்ரோன் பிராண்டில் வர இருக்கும் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் என்ற எஸ்யூவியையும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
இந்த எஸ்யூவி வடிவமைப்பில் மிகவும் தனித்துவமாகவும், அதிக சிறப்பம்சங்களையும் பெற்றிருந்தது. மேலும், இந்தியர்களின் வாங்கும் திறனுக்கு தக்க பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கப்பட்டதால், பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதால், இந்தியாவில் தனது முதல் கார் மாடல் அறிமுகத்தை தள்ளி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிற்பாதியில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, பொருளாதாரம் மேம்படும் நேரத்தில் கார் மாடலை அறிமுகம் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று டீலர்களிடம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், கார் மாடலை அறிமுகம் செய்வது உசிதமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தை மனதில் வைத்து பணியாளர்கள், டீலர்கள், முதலீட்டாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும், பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள அலுவலகம், திருவள்ளூரில் உள்ள கார் ஆலை மற்றும் ஓசூரில் உள்ள எஞ்சின் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிலைமை பொறுத்து ஆலைகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
இதனிடையே, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி டிசைன், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் இந்தியர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களின் சந்தையை குறிவைத்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
-
தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!